உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நமீபியாவில் உற்சாக வரவேற்பு; மேளம் கொட்டி மகிழ்ந்த பிரதமர் மோடி!

நமீபியாவில் உற்சாக வரவேற்பு; மேளம் கொட்டி மகிழ்ந்த பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விந்தோக்: நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு மேளம் கொட்டி பிரதமர் மோடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, அடுத்த கட்டமாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவுக்கு சென்றார். நமீபியாவின் விண்ட்ஹோக்கில் தரையிறங்கிய மோடியை அந்நாட்டு அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வா நேரில் வந்து வரவேற்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a57v65ha&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி, வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு குதூகலமாக பிரதமர் மோடி மேளம் கொட்டி மகிழ்ந்தார். நமீபியா அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை மோடி நடத்த உள்ளார். அந்நாட்டு பார்லியிலும் உரையாற்ற உள்ளார். இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:சற்று முன்பு விண்ட்ஹோக்கில் தரையிறங்கினேன். நமீபியா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம். இன்று நமீபியா பார்லிமென்டில், உரையாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

kr
ஜூலை 09, 2025 21:15

மாபெரும் சபை களில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேன்டும் ….


அப்பாவி
ஜூலை 09, 2025 17:09

இங்கே பாலம் விழுது. விமானம் நொறுங்குது. அங்கே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.


vivek
ஜூலை 09, 2025 17:58

சாம்பிராணி அப்பாவி, இங்க சமூக நீதி நடக்குது


Narayanan
ஜூலை 09, 2025 14:29

பிரதமர் அவர்களே இந்தியாவில் பெட்ரோலிய பொருள்களின் விலையை பாதியாக குறையுங்கள்


G Mahalingam
ஜூலை 09, 2025 15:17

பெட்ரோலிய பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி ஆவதில்லை. 98 சதவீதம் இறக்குமதி செய்ய படுகிறது என்று தெரியுமா? இறக்குமதி பொருளை பாதி விலைக்கு கொடுத்தால் இலங்கை பாகிஸ்தான் போல நாடு திவால் ஆக வேண்டியதுதான்


ஆரூர் ரங்
ஜூலை 09, 2025 17:29

ஏன்? சாலைகள் முழுவதும் ட்ராபிக் ஜாம் ஏற்படவும் புகை மண்டலமாக ஆகவும் ஆசையா? இப்போதைக்கு மின்சார, ஹைட்ரஜன் வண்டிகளுக்கு ஊக்கம் தருவதற்கு முன்னுரிமை. பெட்ரோல் விலைக் குறைப்பு அதற்கு வேட்டு வைக்கும். அரபி லஞ்சத்துக்கு கூவும் பிறவிகள்தான் பெட்ரோல் இறக்குமதியை அதிகரிக்க போராட்டம் நடத்துகின்றன.


RAJ
ஜூலை 09, 2025 14:18

Gem in the Crown in india prime ministers list.no before , no after.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 09, 2025 13:51

அந்த ஊரு பத்திரிகைக்காவது ஒரு பொது பேட்டி தருவாரா ??


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 09, 2025 15:59

எதுக்கு ஒருநாட்டின் பிரதமர் பொது பேட்டி தரணும் ..அவர் வேலையை அவர் செய்தால் போதும் ... பாராளுமற்றதில் உறுப்பினர்களின் கேள்விக்கு அற்புதமாக பதில் சொல்கிறார் .. வெளிநாட்டில் மிகவும் நாகரீகமாக நடந்து கொள்கிறார் ..இதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களிலேயே அதிக வெளிநாட்டு விருதுகளை வாங்கியவர் இவர்தான் ..இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தினார் ,, அணுஆயுத போரில் கில்லி என்று சொல்லிக்கொண்ட நாடுகளெல்லாம் போரை ஆரம்பித்து எப்படி போரை முடிவுக்கு கொண்டுவருவது என்று தவிக்கும்போது வெறும் 45 நிமிடங்களின் பாகிஸ்தானை தாக்கி முடமாக்கிவிட்டார் .அந்த வெற்றியை பற்றி சுய தம்பட்டம் அடிக்க வில்லை ..எதிரிகள் தான் கதறுகிறார்கள் . இனி பாக்கித்தான் கனவிலும் போரைப்பற்றி நினைக்குமா ..உளவு துறையை அற்புதமாக பயன்படுத்தி தீவிரவாதிகளை மட்டும் அழிக்கிறார் ..எதிரி நாட்டு மக்களை ஒன்றும் செய்ய்யவிலை . பேட்டியெல்லாம் திராவிட மாடல் அரசு செய்யும் ...நீங்கள் தான் பார்கிறீர்களே ...


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 09, 2025 16:27

எதுக்கு பேட்டி தரணும் என்று கேட்கும்போதே உமது அறிவின் விசாலம் புரிகிறது ....ஜனநாயகத்தில் பிரதமர் பொதுமக்களுக்கு பதில் தரணும் . கேள்விகளுக்கு சுயபுத்தியுடன் ப்ராம்ப்ட்டர் உதவி இல்லாமல் பதில் அளித்தால் தான் பிரதமர் முடிவுகளை அவர் தீர்க்கமாக யோசித்து டுகிறார் என்பது ஊர்ஜிதமாகும் ...வேறுவழியின்றி நடைபெற்ற ஒரு அபூர்வமான பத்திர்கையாளர் பேட்டியில் தனக்கான கேள்வி என்ற புரிதல் கூட இல்லாமல் அமெரிக்க ஜனாதிபதியுடன் திரு திரு என விழித்துக்கொண்டு நின்ற அந்த தருணம் ஒட்டுமொத்த பாரதத்துக்கும் ஒரு தலைகுனிவு ...பாராளுமன்றத்தில் பதில் தருகிறாரா ?? கட்டுசோற்றுக்குள் முழுப்பூசணியை மறைக்கப்பார்க்கும் வேலை இது ... நாட்டை ஆண்ட பிரதமர்களிலேயே பாராளுமன்றத்தில் மிக சொற்பமான நேரத்தை செலவிட்ட பிரதமர் இவர் தான் என்பது ஒட்டுமொத்த உலகத்துக்கும் தெரியும் .. அதிலும் எதிர்க்கட்சி கேள்விகளுக்கு பாராளுமன்றத்தில் பதில் அளித்தாரா ?? பாராளுமன்றத்தில் இவரை பேசவைப்பதற்காகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது எல்லாம் வெகு சமீப வரலாறு ... வடகிழக்கில் ஒரு மாநிலமே பற்றி எரிகிறது ....இதுவரை பாராளுமன்றத்தில் அதுகுறித்து இவர் வாயை திறந்திருப்பாரா ?? புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் இவர் மனப்பாடம் செய்து பேசியது சொதப்பியது உலகத்துக்கே தெரிந்தது ....


RAVINDRAN.G
ஜூலை 09, 2025 16:52

என்னிக்கி துண்டு சீட்டு இல்லாம பேசறாரோ, என்னிக்கி கேள்வி பதிலை மனப்பாடம் செய்யாமல் பேசறாரோ ஏகப்பட்ட ரிஹர்சல் பண்ணனும் அன்னிக்கி ஜி பேட்டி கொடுப்பார். லோக்கல் பேட்டி எல்லாம் கொடுக்க வேற ஆளுங்க இருகாங்க அண்ணா. ஜி டீலிங்கே வேற மாதிரி இருக்கும்.


ஆரூர் ரங்
ஜூலை 09, 2025 17:32

RSB ஊடகங்களே அதிகம். அவற்றுக்கு மரியாதை தருவது பிரதமரின் வேலையில்ல. அவற்றுக்கு பதில் கூற கீழ் மட்ட அதிகாரிகள் போதும்.