உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரசியல்வாதிகளுக்கு அறிவுரை சொல்லுங்க: அமித்ஷா பேச்சுக்கு வங்கதேசம் எதிர்ப்பு

அரசியல்வாதிகளுக்கு அறிவுரை சொல்லுங்க: அமித்ஷா பேச்சுக்கு வங்கதேசம் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் ஊடுருவுகிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு வங்கதேச அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.கடந்த 20ம் தேதி ஜார்கண்டில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் மாநிலத்திற்குள் ஊடுருவுகின்றனர். இங்கு பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ரோஹிங்கியா மற்றும் வங்கதேசத்தவர்களின் ஊடுருவலில் இருந்து மாநிலத்தை விடுவிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு வங்கதேசத்திற்கான இந்திய துணைத்தூதரை வரவழைத்து அந்நாட்டு அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.அப்போது அந்நாட்டு அதிகாரிகள் கூறியதாவது: இந்த பேச்சு கடும் அதிருப்தி அளிக்கிறது. இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அரசியல் தலைவர்களுக்கு இந்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும்.பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு, அண்டை நாட்டின் குடிமக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது என்பது, இரு நாடுகளுக்கு இடையயான நட்புறவை பாதிக்கும். இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

MADHAVAN
செப் 25, 2024 19:58

குஜராத்தில் கலவரம் நடந்த விவகாரத்தில் 6 மாசம் தலைமறைவாக இருந்த உமக்கு எங்க நேர்மை இருக்க போகுது ?


Kumar
செப் 25, 2024 02:58

What Amit Shaw told is fully true. Are we to blindly allow their people without any visa to come and stay here and then to troubles. No country in the world will do like this.


Vijay D Ratnam
செப் 24, 2024 23:09

பேச்சை குறைங்க அமித்ஷா அவர்களே. செயலை காட்டுங்கள். 75 ஆண்டுகளாக இந்தியா முழுமைக்கும் ஊடுருவிய பங்களாதேஷிகளை ஒருத்தன் விடாமல் பிடித்து துரத்துங்கள். இனி பங்களாதேஷ் இன்னொரு பாகிஸ்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த நாட்டுடனான ஏற்றுமதி இறக்குமதி போக்குவரத்து குறிப்பாக மின்சாரம் இவற்றை அடியோடு நிறுத்துங்கள். அங்கே தொழில் செய்துகொண்டு இருக்கும் இந்திய தொழிலதிபர்களை நமது நாட்டில் வந்து தொழில் தொடங்க சொல்லுங்கள். பங்களாதேஷில் உள்நாட்டு கலவரம் வெடிக்கும் மாதிரி வந்து காலில் உழுவானுங்க.


KK RANGAN
செப் 25, 2024 10:12

சார் மோடி அமித் ஷ் எலேச்டின் வரும் போது ஹிந்துத்வா ஹிந்துக்கள் நலன் பத்தி வாய் வலிக்க வாய் கிழிய பேசுவானுங்க...ஆனா செயலில் பூஜ்ஜியம். பத்து வருஷமா பதவியில இருந்து முழுக்கவே இல்லை.. இவனுங்க ஏமாத்து பேர்வழிகள்.ஓட்டுக்காக மட்டுமே ஹிந்துக்களை ஹிந்துத்துவா பத்தி பேசி பப்ளிசிட்டி வாங்கிப்பானுங்க...ஏமாறாம என்னடா பண்ணி கிழிச்சீங்கணாணு கேக்கணும்.


Dharmavaan
செப் 24, 2024 22:32

நம் நாட்டினை பற்றி பேசினால் இவனுக்கு ஏன் கோபம் வருகிறது


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 24, 2024 21:48

அட்டைக்கத்தி வீரர் அமித் ஷா வாழ்க .....


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 24, 2024 21:47

வாய்ச்சொல் வீரர்களுக்கு வங்கதேசம் கொடுத்தது சரியான பதிலடிதான் ....


duruvasar
செப் 24, 2024 19:54

₹200 க்கு விலை போகும் பிறவிகள் எல்லா ஊரிலும் இருப்பதே இதற்கு காரணம். இந்த பிறவிகள் நாட்டை பிடித்த. 7 1/2 கள் என்றால் மிகையாகாது.


Saai Sundharamurthy AVK
செப் 24, 2024 18:59

முதலில் வங்கதேச அரசின் யோக்கியதை என்ன என்று சொல்ல சொல்லுங்கள். ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி ஆட்சியை பிடித்த ஷேக் ஹசினாவை விரட்டியடித்து ஆட்சியை கைப்பற்றியது எந்த விதத்தில் நியாயம்...! இதை சாக்காக வைத்துக் கொண்டு இந்துக்களை கொடுமைப்படுத்தியது, விரட்டியடித்தது, அவர்களை கொன்றது எந்த விதமான ஜனநாயகம். ஏதோ மாவீரர்கள் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அமித்ஷா சொல்வது அத்தனையும் உண்மை தான். அமித்ஷா இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்பதை மறந்து விட வேண்டாம். அவருக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை.


Rasheel
செப் 24, 2024 18:20

போலி ஆதார் கார்டுகளை வைத்து கொண்டு கன்னியாகுமாரி வரை பரவி விட்டனர். ஆதார் கார்டுகள் பெற இந்திய பள்ளி கல்வி சான்றிதழ் கட்டாயம் என்று சட்டம் கொண்டு வந்தாலே இதை தடுக்கலாம். மத்திய அரசு எல்லையை பலப்படுத்த தவறிவிட்டதும் நாட்டின் கிழக்கு மாநிலங்கள் இதை வோட்டு அரசியலுக்கு பயன்படுத்துவதும் இதற்கு காரணம்


Sathyanarayanan Sathyasekaren
செப் 24, 2024 18:00

முதலில் திருப்பூரில் இருந்து ஆரம்பிக்கலாம். இங்கே இருக்கும் கத்திக்கு பயந்து மாறிய பாலைவனமதத்தினர் ரொஹிங்கியாவின், பங்களாதேஷிகளின் உண்மைமுகம் தெரியாமல் ஆதரிக்கின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை