வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சாவுங்கடே......
அமெரிக்க அமீர் டிரம்ப் முடிவு செய்து விட்ட பின் எப்படி யூனுஸை மாற்ற முடியும்... அவராக மனது மாறினால்தான் உண்டு.
டாக்கா : வங்கதேசத்தில் முஹமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை அகற்ற, ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு உளவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த மாணவர்களின் போராட்டத்தை அடுத்து, பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.இந்த அரசுக்கு ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் முழு ஆதரவு அளித்தார். விரைவில் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்று அவரது தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இடைக்கால அரசு அமைந்து எட்டு மாதங்கள் ஆகியும், தேர்தல் நடத்தாததை அடுத்து, பிற தளபதிகளுடன் வாக்கர் உஸ் ஜமான் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். அவர்கள் பொதுத்தேர்தல் நடத்த சம்மதித்த நிலையில், எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளும் பொதுத்தேர்தலை நடத்த இடைக்கால அரசை வலியுறுத்தின. இதையடுத்து, வங்கதேச தேசியவாத கட்சி, தேசிய மக்கள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடன் முஹமது யூனுஸ் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, 'பொதுத்தேர்தல் வரும் டிசம்பர் துவங்கி அடுத்தாண்டு ஜூன் வரை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என, யூனுஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்த ராணுவ தளபதி வாக்கர், யூனுசின் இந்த முடிவை விரும்பவில்லை. இதையடுத்து இடைக்கால அரசை அகற்ற தேவையான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசுக்கு எதிராக பொதுத் துறை நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் முன்னெடுத்துள்ள போராட்டத்தை வைத்து காய்களை நகர்த்த, அவர் திட்டமிட்டுள்ளதாக வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்படுத்துவது அரசியலமைப்பு விதிமுறைகளை மீறுவதாக கூறி, அதிபர் முஹமது ஷஹாபுதீனை சந்தித்து அவசரகால நிலையை அறிவிக்க அழுத்தம் கொடுக்கவும், ராணுவ தளபதி வாக்கர் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.அவசர நிலையின் போது, இடைக்கால அரசை கலைத்துவிட்டு தேர்தலை விரைவுபடுத்தும்படி அதிபரிடம் தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு கவிழ்க்கப்பட்ட 90 நாட்களுக்குள், புதிய அரசு அமைய வேண்டும் என்பதால், முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹசீனா, கலீதா ஜியா ஆகியோரின் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலில் போட்டியிடும் முடிவையும் வாக்கர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளின் ஆதரவை பெற்றுள்ள அவர், அடுத்ததாக இடைக்கால அரசின் தோல்வி குறித்து மக்களிடையே பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைதள பக்கத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:வங்கதேசத்தில் சட்டவிரோதமாக, பயங்கரவாதிகளின் உதவியுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய முகமது யூனுசுக்கு, அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும் உரிமையை யார் கொடுத்தது? அவருக்கு மக்களின் ஆதரவு இல்லை. அரசியலமைப்பு சட்டம் குறித்து அடிப்படை அறிவும் இல்லை. பதவியில் இருக்க முகமது யூனுசுக்கு எந்த தகுதியும் இல்லை. பார்லிமென்ட் ஒப்புதலின்றி அவர் எப்படி சட்டத்தை மாற்ற முடியும். பயங்கரவாதிகளின் உதவியோடு ஆட்சி நடத்தி வருகிறார் முஹமது யூனுஸ். வங்க தேசத்தை அமெரிக்காவிற்கு அவர் தாரைவார்த்து விட்டார்.
வங்கதேசத்தில், இடைக்கால அரசு கொண்டுவந்துள்ள பொது சேவை சட்ட திருத்தத்துக்கு எதிராக அரசு ஊழியர்கள் மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுதும் அரசு அலுவலக பணிகள் ஸ்தம்பித்தன.தலைநகர் டாக்காவின் மையப்பகுதியில் அமைந்துள்ள தலைமைச் செயலக அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு ஊழியர் சங்கத்தினர், பிரதான வாயிலின் கதவை இழுத்து பூட்டினர். தவறு செய்யும் அதிகாரிகளுக்கு தண்டனை மற்றும் பணி நீக்கத்துக்கு வழி செய்யும், பொது சேவை அவசர திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்தனர்.இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவுப்படி, வங்கதேச தேசியவாத கட்சியைச் சேர்ந்த இஷ்ராக் ஹொசனை மேயராக நியமிக்க வலியுறுத்தி அக்கட்சியினர் டாக்காவில் போராட்டம் நடத்தியதால் பதற்றம் அதிகரித்தது. பொதுத் துறை நிறுவனத்தினர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரின் தொடர் போராட்டத்தால், வங்கதேசத்தில் அமைதியின்மை நிலவுகிறது.
சாவுங்கடே......
அமெரிக்க அமீர் டிரம்ப் முடிவு செய்து விட்ட பின் எப்படி யூனுஸை மாற்ற முடியும்... அவராக மனது மாறினால்தான் உண்டு.