உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அவங்களோட திட்டம் என்ன? கடனை திருப்பி கொடுக்காத மாலத்தீவு உடன் சீனா புதிய நிதி ஒப்பந்தம்

அவங்களோட திட்டம் என்ன? கடனை திருப்பி கொடுக்காத மாலத்தீவு உடன் சீனா புதிய நிதி ஒப்பந்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: ஏற்கனவே கழுத்தை நெரிக்கும் வகையில் கடனில் சிக்கி தவிக்கும் மாலத்தீவுக்கு வரைமுறையின்றி கடன் வழங்க சீனா புதிய நிதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து சீனா எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.ஆபத்தில் உதவுவது போல், உதவி செய்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தான் சீனாவின் பழக்கம் என்றே சொல்லலாம். இது தான் அவர்களது ஸ்டைல் எனவும் அனைவருக்கும் தெரியும். ஏற்கனவே, பொருளாதார நெருக்கடி உள்ள நாடுகளுக்கு கடனை அள்ளி கொடுத்து, பின்னர் திருப்பி தர முடியாத சூழல் உருவாகும் போது தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தனக்கு தேவையான வேலைகளை செய்ய பயன்படுத்தி வருகிறது. இலங்கை சீனாவின் வலையில் சிக்கியுள்ளது. தற்போது மாலத்தீவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது.

ஒப்பந்தம்

இந்நிலையில், ஏற்கனவே கழுத்தை நெரிக்கும் வகையில் கடனில் சிக்கி தவிக்கும் மாலத்தீவுக்கு வரைமுறையின்றி கடன் வழங்க சீனா புதிய நிதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து எந்த தகவலும் சொல்லாமல், சீனா மவுனம் காத்து வருகிறது. வர்த்தகம் மற்றும் முதலீட்டை வலுப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று சீனாவின் மத்திய வங்கி கூறியுள்ளது.

உதவி

சீனாவுக்கு கொடுக்க வேண்டிய பழைய பாக்கியை இன்னும் மாலத்தீவு திரும்பி கொடுக்கவில்லை. 'மாலத்தீவின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா எப்போதும் போல ஆதரவையும், உதவியையும் வழங்கும்' என அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்தார்.

கடன் எவ்வளவு?

மாலத்தீவின் மிகப்பெரிய கடன் வழங்குபவர் சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன் $1.3 பில்லியனுக்கு மேல் உயர்ந்துள்ளது. சீனா இன்னும் கூடுதலான ஆதரவு கொடுக்க மாலத்தீவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மாலத்தீவின் புதிய அரசின் ஆட்சியில் கடன் அதிகரித்துள்ள போதிலும், சீனா ஆதரவாக உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாலத்தீவு பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து தான் சீனா, மாலத்தீவு இடையே உறவுகள் அதிகரித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Rayan Wind
செப் 16, 2024 20:12

விதி யாரை விட்டது


Rayan Wind
செப் 16, 2024 19:43

சீனா தனது அடிமைகளை எப்படி எல்லாம் தேர்ந்தெடுக்கிறார்கள் ???


K Rama moorthy
செப் 16, 2024 14:16

கந்து வட்டி சீனா


sampath kumar
செப் 15, 2024 07:16

தமிழகத்தின் கடன் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. அதைபற்றி நாம் கேள்வி கேட்பதில்லை. மாலத்தீவை பற்றி கவலைபடுகிறோம்.


Ravichandran S
செப் 14, 2024 15:54

கடல்ல மூழ்கினாலும் சீனா பக்கமே போங்க இங்க இந்தியா பக்கம் மட்டும் வந்து விடாதீர்கள்


Kumar Kumzi
செப் 14, 2024 12:49

எங்க தள்ளபதியின் திராவிஷ மாடல் டாஸ்மாக் சரக்கு யாவாரம் பண்ணு உள்ளூர் வருமானம் பெருகும் அத்தோடு போதைப்பொருள் யாவாரம் செய்யவும் ஒதவி பண்ணுவாரூ


Kumar Kumzi
செப் 14, 2024 12:40

நீரில் மூழ்க போகும் மூர்க்கம் முதலையின் வாயில் சிக்கிக்கொண்டது இந்திய எந்தவொரு உதவியும் செய்ய கூடாது


Anand
செப் 14, 2024 12:10

ஒழிக்க சீனா அயராது பாடுபடுகிறது.


ஆரூர் ரங்
செப் 14, 2024 10:42

கடல்மட்ட உயர்வால் இன்னும் சில ஆண்டுகளில் இந்த தீவு நாடே மூழ்கிவிடும். இப்போ கடனில் மூழ்குவது செய்தியே இல்லை.


கிஜன்
செப் 14, 2024 10:20

.. சீன கம்பெனிகள் வேலைல பிழிஞ்சு எடுத்துருவாங்க ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை