உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் ஹிந்துக்கோவில்கள் மீது தொடரும் தாக்குதல்: சிலைகளுக்கு தீவைப்பு

வங்கதேசத்தில் ஹிந்துக்கோவில்கள் மீது தொடரும் தாக்குதல்: சிலைகளுக்கு தீவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்துக்கோவில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இன்று மேலும் 3 கோவில்களை சூறையாடிய மர்ம நபர்கள், சிலைகளுக்கு தீவைத்தனர்.வங்கதேசத்தில் தொடர்ந்து ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள் மீதும், அவர்களது வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் இல்லை. இதற்கு எதிராக ஹிந்துக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9oforxcz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், டாக்காவில் நமஹட்டா மையத்தில் உள்ள இஸ்கான் கோவிலை சூறையாடிய மர்ம நபர்கள், அங்கிருந்த கடவுள் சிலைகளுக்கும் தீவைத்தனர். அதில் அங்கிருந்த லட்சுமி நாராயணர் சிலை மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. மேலும் டாகாவின் புறநகர் பகுதியான தோவூர் கிராமத்தில் ஹரே கிருஷ்ணா நம்ஹட்டா சங்கம் நிர்வகித்து வந்த ஸ்ரீஸ்ரீ மகாபாக்யா லட்சுமிநாராயணன் கோவில் மற்றும் ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணா கோவிலையும் சூறையாடிய மர்ம நபர்கள் அங்கிருந்த சிலைகளுக்கு தீவைத்தனர். அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனை கோல்கட்டாவில் உள்ள இஸ்கான் நிர்வாகிகள் உறுதி செய்துள்ளனர்.மகாபாக்யா லட்சுமி நாராயணன் கோவிலின் முன்பகுதியில் சிசிடிவி கேமரா இருந்தது. இதனையறிந்த மர்ம நபர்கள் பின்புறம் வந்து கோவிலை சூறையாடி சிலைக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததும், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

sankar
டிச 08, 2024 09:27

தமிழகத்திலும் நாள்தோறும் கோயில் சிலைகளை ஒரு குரூப் இடிக்கிறதே - மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - மாநில அரசால் செய்யமுடியாது - ஏனென்றால் அந்த மிருகங்களின் வால்கள் இவர்கள்


RAJ
டிச 08, 2024 08:26

ராவுளும் மமதையும் happy அண்ணாச்சி ...


கிஜன்
டிச 08, 2024 06:52

வங்கதேச வெள்ளம் ...இயற்கை பேரிடரின்போது .... அனைவருக்கும் உணவளித்த இயக்கம் கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் .... எதற்காக இந்த அமைப்பை மட்டும் குறிவைத்து தாக்குகிறார்கள் என்று புரியவில்லை ... உதவி செய்வது தவறா?


sridhar
டிச 08, 2024 08:03

மூரக்ஸ் மொழியில் நன்றி தெரிவிக்கிறார்கள் .


venkat venkatesh
டிச 07, 2024 23:16

It would be controlled


Ganapathy
டிச 07, 2024 22:36

காரணம் இதைத் தட்டிக்கேட்ட ஸனாதனிகளை அந்த சமுதாயமே கிண்டல்கேலி செய்தது. Low IQ செகுலர் ஸனாதனிகளின் இச்செயல் இங்குள்ள முஸ்லீம்களிடையே ஸனாதனிகளினு மீது எகத்தாளத்தை வரவழைத்தது. தனக்குத்தானே ஒற்றுமையில்லாமல் வெறும் செகுலர்வாதி என்ற பெத்த பெருமைக்காக தனக்குத்தானே சொந்த காசில் இன்றுநேற்றல்ல பல காலமாக சூன்யம் வைத்துக் கொள்ளும் ஸமுகம் ஹிந்து ஸனாதன ஸமூஹம். இதில் ஐநா ஸ்பை தலையிடவில்லை மோதி தலையிடவில்லை என புலம்புவதில் என்ன பயன்? 545 வருடத்திற்கு பிறகு ராமருக்கு அய்யோத்தியாவில் மீண்டும் கோவில் கட்டிய மோதியின் பாஜகவை அய்யோத்தியா தொகுதி மக்களே தோற்கடித்த கேவலம் நடந்தபின்பும் பாஜகவை கேட்விகேட்க ஸாதனிகளுக்கு என்ன தகுதி உள்ளது? இதே ஒரு மஸூதியை பாஜக கட்டியிருந்தால் அடுத்த 545 வருடங்களுக்கு கட்டாயம் இஸ்லாமிய சமூகம் பாஜகவுக்கே ஓட்டு போடும் என்பது உறுதி. எனவே தன்னுள் ஒற்றுமையாக இல்லாத ஸமூகம் உலகத்தில் எப்படிப்பட்ட கேவலங்களை ஸந்திக்கும் என்பதற்கு பங்களாதேஷில் நடக்கும் ஸம்பவங்களே நிதர்ஸனமான சாட்சி. இன்னமும் பல அசிங்கங்களையும் கேவலங்களையும் அவமானங்களையும் அடக்குமுறைகளையும் ஸனாதன ஹிந்து ஸமூஹம் வரும் பல நூற்றாண்டுகளுக்குச் ஸந்திக்கப்போவது உறுதி. அடுத்த ஸமூகங்கள் தேவையில்லை ஹிந்துக்களின் அழிவுக்கு. தானே கெட்டு அழியும் திறன் உள்ள ஒரே ஸமூஹம் ஸனாதன ஹிந்து ஸமூஹம்.


sridhar
டிச 08, 2024 08:05

Excellent. Secular Hindu is a dumb animal without brain.


Gopalakrishnan Thiagarajan
டிச 07, 2024 22:26

Time to repack all the illegal immigrants in India


Priyan Vadanad
டிச 07, 2024 22:09

வங்கதேச பிரச்சினையே அரசியல் சம்பந்தப்பட்டது என்று நினைக்கிறேன். இதை சாதகமாய் பயன்படுத்திக்கொண்டு ஒருசில மக்கள் விரோத சக்திகள் மதப்பிரச்சினையை உண்டுபண்ணி குளிர்காய பார்க்கிறார்கள். இப்படி உருவாகும் மதப்பிரச்சினையில் அரசாங்கமும் ஆதாயமடைய பார்க்கிறது. மத நம்பிக்கையை காயப்படுத்துவது, அது எங்கு நடந்தாலும் தவறு.


Nandakumar Naidu.
டிச 07, 2024 21:37

மர்ம நபர்கள் என்ன? என்ன மர்மம் வேண்டி இருக்கிறது? மத வெறி பிடித்த ஹிந்து விரோத மிருகங்கள் தான் இதை செய்திருக்கிறது? பங்களாதேஷ் அரசும் அதை வேடிக்கை பார்க்கிறது. நம் இந்திய அரசும் மத சார்பின்மை என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது. இந்துக்கள் தான் ஒன்றிணைந்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இந்துக்கள் ஒன்றிணைந்து இருந்தால் தான் வாழ்வு இல்லையேல் வங்காளதேசத்தில் இந்துக்களின் நிலைதான் இந்திய இந்துக்களுக்கும் நம் சந்ததியினருக்கும் வருங்காலங்களில் சொல்லொண்ணா துன்பம் தான் மிஞ்சும். விழித்துக் கொள்ளுங்கள் இந்துக்களே.


mei
டிச 07, 2024 21:24

செக்யூலர் இந்தியா இன்னும் எத்தனை காலம் இதை பார்த்து கொண்டு இருக்க போகிறது?


Barakat Ali
டிச 07, 2024 22:22

இந்திய அரசு அஃபிஷியலாக / டிப்ளமாட்டிக்காக எச்சரித்தும் இது தொடர்கிறது என்றால் ஏதோ பலமான பின்புலம் - அது அமெரிக்காவாக இருக்கலாம் - இருப்பதாகத் தோன்றவில்லையா ??


Balaji Radhakrishnan
டிச 07, 2024 21:15

Our central government does not react to the incidents. Why?


Barakat Ali
டிச 07, 2024 22:23

Probably American deep state controlling in background.


Visu
டிச 07, 2024 23:54

எடுக்கலாம் இதை சொல்லியே கான்கிராஸும் உண்டி குலுக்கியும் மதகலவரத்தை தூண்டிவிடும். காஸாவிற்கு கதறும் இவர்கள் நம் அண்டை நாட்டில் நடப்பதை கண்டு கொள்ளாமல் நவதுவாரத்தையும் மூடிக்கொண்டிருப்பதேன்


புதிய வீடியோ