உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு நிராகரிப்பு ஏன் தெரியுமா? இதுதான் காரணம்!

அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு நிராகரிப்பு ஏன் தெரியுமா? இதுதான் காரணம்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்காததற்கு காரணம் குறித்து பல்வேறு தகவல் வெளியாகியுள்ளன.கடந்த சில தினங்களாக அதிகம் கவனம் பெற்ற விஷயம் அமெரிக்க அதிபர் டிரம்பும், அமைதிக்கான நோபல் பரிசும் தான். தான் 7 போர்களை நிறுத்தியதற்காக, இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு தான் வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டு வந்தார். மேலும், நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவை இழிவுபடுத்தும் செயல் என்றும் கூறி வந்தார். இந்த சூழலில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதில் டிரம்பின் பெயர் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக வெனிசுலா நாட்டைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இது டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் காலத்திற்குப் பிறகே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி 1ம் தேதிக்கு முன்பாக, நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அதிபர் டிரம்ப்பின் பெயரை பிப்.,1க்குப் பிறகு பரிந்துரை செய்துள்ளன. இதுவே அவருக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனதற்கான காரணமாகும். இது குறித்து நார்வேவைச் சேர்ந்த நோபல் பரிசு தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஜோர்கன் வாட்னே பிரிட்னெஸ் கூறியதாவது; நோபல் பரிசு தேர்வு கமிட்டி, அனைத்து வகையான பிரசாரங்கள், ஊடக கவனத்தையும் பார்த்துள்ளது. அமைதிக்கு வழிவகுக்கும் காரணிகள் குறித்து ஆயிரக்கணக்கான கடிதங்களை ஆண்டுதோறும் பெறுகிறோம். நாங்கள் அமர்ந்திருக்கும் அறை தைரியம் மற்றும் நேர்மையால் நிரம்பியுள்ளது. எங்களின் முடிவை ஆல்பிரட் நோபலின் (நோபல் பரிசை அறிமுகப்படுத்தியவர்) செயல் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கிறோம், இவ்வாறு கூறினார். ஹென்றி ஜாக்சன் சொசைட்டியின் வரலாற்று ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் தியோ ஜெனூ கூறுகையில், 'அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் நீண்ட காலமாக நிலைக்குமா? என்று நிரூபிக்கப்படவில்லை. குறுகிய காலத்தில் சண்டையை நிறுத்துவதற்கும், மோதலின் அடிப்படை காரணங்களை தீர்ப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது,' இவ்வாறு அவர் கூறினார்.

டிரம்ப் பணி தொடரும்

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் செயுங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகம் முழுவதும் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கும், போரை நிறுத்துவதற்கும், உயிர்களை காப்பதற்கான பணிகளில் டிரம்ப் தொடர்ந்து ஈடுபடுவார். மனிதநேயத்திற்கான மனம் அவரிடம் உள்ளது. அமைதியை விட அரசியலை முன்னிறுத்துவதையே தேர்வுக்குழுவினர் முன்னிறுத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

ramani
அக் 12, 2025 06:13

திராவிஷ மாடல் அமெரிக்கா வரைக்கும் பரவியிருக்கிறது. ட்ரெம்போட வாய்சவடாலை பார்க்கும்போது தெரிகிறது


Kulandai kannan
அக் 11, 2025 14:21

அடுத்த ஆண்டு நோபல் பரிசுக்கு ட்ரம்புக்கும், தமிழக முதல் மந்திரி க்கும் கடும் போட்டி இருக்கும்.


Venugopal S
அக் 11, 2025 10:31

பிரதமர் மோடி அவர்கள் ட்ரம்ப் பெயரை பரிந்துரை செய்யாததால் தான் ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை


Senthoora
அக் 11, 2025 06:04

நோபல் பரிசு தேர்வுக்கு முக்கியமா 20 புள்ளிகள் சமர்ப்பிக்கனும், அதில் முதலாவது இளம்பிராயத்தில் இருந்து ஒழுக்கம் இருக்கனும், ஆனால் தரும் பல பாலியல் வழக்கில் சிக்கியவர். உலகில் எங்கிருந்தும் ஒரு சிறு கருவிமூலம் இப்போ கையடக்க தொலை பேசி உலகை தொடர்பு கொள்ளமுடியும் என்றும், நிட்சயம் சந்திரனில் மனிதன் கால் வைப்பான் என்று 1950 களில் சொன்னவர் இலங்கையை சேர்ந்த விஞ்ஞானி ஆர்தர் C கிளார்க், அவருக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கப்பட்டபோது நிராகரிக்கப்பட்டது, காரணம் அவர் ஓரின சேர்க்கையாளர் என்பதனால். பின்னாளில் அவருக்கு அதி உயர்த வானிலை விஞ்ஞானத்துக்குஆன அவார்டு வழங்கப்பட்டது.


Sun
அக் 10, 2025 23:59

டிரம்புக்கு நோபல் அவார்டு கொடுத்தால் எனக்கு ஆஸ்கார் அவார்டு கொடுக்கணும் பவர் ஸ்டார் போர்க் கொடி!


Srinivasan Narasimhan
அக் 10, 2025 23:18

அப்பாவிற்கு கொடுக்கனும் அவரால்தான் பேலஸ்தீன் பிரச்சனை முடிவுக்கு வருகிறது


kumarkv
அக் 10, 2025 21:43

டிரம்புக்கு தான் கொடுக்கல ...நமது முதல்வருக்கு கொடுக்கலாம்


V K
அக் 10, 2025 21:38

டிரம்ப் தாத்தா நார்வே நாட்டுக்கு வரியை 400% போடு அதை அமெரிக்கர்கள் கட்டுவார்கள்


Mr Krish Tamilnadu
அக் 10, 2025 19:54

அமெரிக்க அதிபர் என்பது எவ்வளவு உயர்ந்த பதவி. உலகையே கைக்குள் வைத்து கொள்ள முடியும் அன்பால். அந்த பதவியில் உள்ளவர்க்கும் எட்டாத உயரத்தில் ஒருசில விசயங்கள், ஒருசில ஆசைகள் இருக்க தான் செய்கிறது. தன்னால் எல்லாம் முடியும் என நினைப்பவர்கள் இவரே ஒரு உதாரணம். விலைமதிப்பற்ற பொருட்கள் எந்த விலைக்கும் கிடைக்காது.


Rathna
அக் 10, 2025 19:13

இது தகுதிக்கான பரிசு. தறுதலைக்கான பரிசு அல்ல என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.


SANKAR
அக் 10, 2025 20:48

Maria Machado dedicated Prize to TRUMP..Many do not know Trumps full support and backing for Venizuelan human rights activists.Maria died not think Trump is a tharuthalai. Venezuela known for drug mafia and killing of whisle blowers


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை