பிரேசிலை தாக்கிய சூறாவளி: 5 பேர் பலி
பிரேசிலா: தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இங்கு பரானா மாகாணத்தை சூறாவளி தாக்கியது. பலத்த காற்றுடன் , கனமழையும் பெய்ததால் பல பகுதிகளில் கட்டடங்களில் கூரைகள், விளம்பர பலகைகள் சேதமடைந்தன. சூறாவளியால் மரங்கள் முறிந்து விழுந்தன. பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூறாவளியில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 432 பேர் காயமடைந்தனர். போலீசார், தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.