உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிகாரிகளுக்கு லஞ்சம்; அதானி மீது அமெரிக்கா பகீர் குற்றச்சாட்டு

அதிகாரிகளுக்கு லஞ்சம்; அதானி மீது அமெரிக்கா பகீர் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: 'தொழிலதிபர் அதானி சூரிய ஓளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை 25 கோடி டாலர்கள் லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்து பெற்றுள்ளார். அதில் அமெரிக்கர்கள் முதலீடு செய்ய வைத்து மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தியுள்ளார்' என அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.இந்தியாவின் 2வது பெரிய பணக்காரர் அதானி. உலகளவில் 22வது இடத்தில் உள்ளார். இவர் மீது அமெரிக்கா மிகப்பெரிய குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது. இது குறித்து நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. '2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில், சூரிய ஓளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர்கள் லஞ்சம் அதானி கொடுத்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7ormenhe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லஞ்சம் தொடர்பான தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை திரட்டினார். அதானியின் செயல் சட்டப்படி தவறானது' என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதானியின் உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீதும் அமெரிக்கா புகார் அளித்துள்ளது. இதே புகாரில் அமெரிக்கா பங்கு பரிவர்த்தனை ஆணையமும் அதானி மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து அதானியோ, இந்திய தூதரகமோ இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.அதானி குழுமம், பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு, தங்கள் நிறுவன பங்குகளை போலியாக அதிகரிக்கச் செய்வதாக அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம் மறுப்பு

அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சப் புகாரில் அதானி மீது அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை; அவற்றை மறுக்கிறோம். அமெரிக்காவின் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வோம்; குற்றம் நிரூபணமாகும் வரை ஒருவர் நிரபராதி என்று அந்நாட்டு சட்டத்திலேயே உள்ளது. நாங்கள் எங்கள் பங்குதாரர்கள், கூட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம் என்று உறுதியளிக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

RAMAKRISHNAN NATESAN
நவ 21, 2024 14:09

மூரக்ஸ் ன் நிலைப்பாடு பிரமாதம் ........ இஸ்லாமியர்களை வேட்டையாடும் அல்லது வேட்டையாட உதவிய அமெரிக்கா மீது அவ்வப்போது இவர்களுக்கு வெறுப்பு / விருப்பு வந்து போகும் ... தாலிபான்களை அமெரிக்கா வேட்டையாடிய பொழுதும், பின் லேடனை தூக்கிய பொழுதும் கொதித்தார்கள் ... மோடி விசாவுக்கு அப்ளை பண்ணாத நிலையிலேயே நிராகரித்த அமெரிக்காவை பாராட்டினார்கள் ... விசா கொடுக்கக்கூடாது என்று காங்கிரசுக்கு கையெழுத்து போட்டு கொடுத்தார்கள் .... ஹிந்து சார்பு நாடு என்று அமெரிக்கா கூவிய பொழுது பாராட்டினார்கள் .... ஈரானுடன் உறவு பலப்பட்ட பொழுது மகிழ்ந்தார்கள் .... இஸ்ரேலுடன் உறவு வலுப்பட்ட பொழுது மோடியைத் திட்டி தீர்த்தனர் ... அதானி, அம்பானி மீது குற்றச்சாட்டு வந்தால் கொதித்து எழுவார்கள் .... எங்கே நடவடிக்கை என்பார்கள் ... தெல்கி போன்றவர்கள் மீது நடவடிக்கை என்றால் ஹிந்துத்வாவின் வெறியாட்டம் என்பார்கள் ....


ஜெய்ஹிந்த்புரம்
நவ 23, 2024 02:35

2,100 கோடி எங்கே போச்சுன்னு சொல்லாமே வேற என்னென்னமோ கூவியிருக்கே. ஆட்சியிலே லஞ்சமே இல்லைன்னு கூவினாரு உங்க மோசடி ஐயா. நீ முட்டுக்கொடுத்து அசிங்கப்படுறே.


Bhaskar Srinivasan
நவ 21, 2024 13:00

செய்தியை நன்றாக படிக்கவும் "லஞ்சம் கொடுக்க முயன்றார்"என்று உள்ளது "லஞ்சம் கொடுத்தார்" என்று இல்லை - டூல் கிட் மீண்டும் வேலை செய்கிறது


பாமரன்
நவ 21, 2024 13:50

அதானே பாசு ... கொலையா செஞ்சார்... கொலை செய்ய முயற்சிதான செஞ்சார்... அதை போயி பெருசாக்கறாங்க ... ஆன்டி இந்தியன்ஸ்..


ஜெய்ஹிந்த்புரம்
நவ 23, 2024 02:25

சங்கிக்கு செய்தியை பார்த்து கண்ணை இருட்டிக்கொண்டு வருதா என்ன? சரியாய் படி சங்கீ "சூரிய ஓளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர்கள் லஞ்சம் அதானி கொடுத்துள்ளார்." என்று தான் உள்ளது. மோடி சர்க்கார் போல கையை நீட்டிய இடத்துக்கு ஓடும் அமலாக்கத்துறை இல்லை இந்த அமெரிக்க நீதித்துறை.


வைகுண்டேஸ்வரன்
நவ 21, 2024 12:39

திருட்டு திராவிடர் அதானி ஒழிக என்று எழுத இயலவில்லை. மூர்க்ஸ் அதானி என்றும் எழுத இயலவில்லை. அதானிக்கு கைது வாரண்ட் கொடுத்த திராவிட நீதிபதி ஒழிக என்றும் எழுத இயலவில்லை. பாஜக கொத்தடிமைகள் பாவம்.


sankar
நவ 21, 2024 12:57

இருநூறு ரூபாய்க்கு மட்டும் உலரவும்


hari
நவ 21, 2024 13:24

கொத்தடிமை எனும் பட்டம் திமுக வயே சாரும்....வாழ்க ஜிஎஸ்டி ஆபீசர்


வைகுண்டேஸ்வரன்
நவ 21, 2024 12:37

இந்தியாவுக்கே அவமானம் இது . ஆனால் இவர் பாஜக விற்கு அதிக அளவில் நன்கொடை கொடுத்திருப்பதால், கொத்தடிமை கள் அமெரிக்க நீதிபதியை திட்டுவார்கள்.


sankar
நவ 21, 2024 12:58

காங்கிரசுக்கு கொடுத்ததே அதிகம் தம்பி டு ஹண்ட்ரட்


RAMAKRISHNAN NATESAN
நவ 21, 2024 14:00

How could it be true if someone accuses another? Had you have any proof?


vijay
நவ 21, 2024 12:22

ப்ராஜெக்ட் எடுத்தது இந்தியாவில் வழக்கு தொடுப்பது அமெரிக்காவில் ...கேஸ் எப்படி நிக்கும்.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 23, 2024 02:26

பணம் சுருட்டியது அமெரிக்கர்களிடம் என்பதால். சங்கிக்கு புரியதா?


வைகுண்டேஸ்வரன்
நவ 21, 2024 12:16

Mr. Adani is issued with arrest warrant by the honourable high court of law, Newyork. His relative too is issued with another arrest warrant. இப்போ கொத்தடிமைகள் என்ன எழுதுவார்கள்?


hari
நவ 21, 2024 13:27

all false statement...why vaigundam...you got inr 200 or USD 200...


sankar
நவ 21, 2024 13:36

புலம்ப ஆரம்பித்துவிட்டது


T.G.BHASKAR
நவ 21, 2024 12:14

To buy Adani shares at reduced price?


ஆரூர் ரங்
நவ 21, 2024 12:12

சீன தனியார் நிறுவனங்களுக்கு உதவ கம்யூனிஸ்டு அரசே அன்னிய நாட்டு அரசியல்வாதிகளுக்கு கையூட்டு வழங்கி விடுகிறது. அதனால் சீன நிறுவனங்கள் கள்ளக் கணக்கு கறுப்புப் பணம் கையாள தேவையிருப்பதில்லை. ஆனால் நமது நாட்டு நிறுவனங்களுக்கு உதவ மத்திய அரசு எதைச் செய்தாலும் உடனே அந்நியக் கைக்கூலி அரசு என கம்மிகள் குதிக்கின்றனர்.


கனோஜ் ஆங்ரே
நவ 21, 2024 12:02

அவங்க பாஸோட சொந்தக்காரர் அதானி மேலே குற்றச்சாட்டுன்ன உடனே.... எல்லா அல்லக்கைகளும், வரிசைகட்டி வந்து, அமெரிக்காவை கழுவி, கழுவி ஊத்தறாங்க பாரு...? உப்ப தின்னவன் தண்ணி குடிச்சுதானே ஆகணும். ஆனா, ஒட்டுமொத்தமா “தேசபக்தி”...ங்ற போர்வைல... ஊழல்வாதிய காப்பாத்தப் பார்க்குறாங்க பாரு... இவனுங்கதான் இந்நாட்டின் “யோக்கியனுங்க”..?


ஜெய்ஹிந்த்புரம்
நவ 23, 2024 02:28

26 கோடி டாலரும் லஞ்சமாக போன இடம் பி எம் கேர்ஸ் சுக்கு என்பதால் சங்கிகள் வரிசை கட்டி நின்று காப்பாத்த வருகிறார்களா?


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 21, 2024 11:59

எங்க குடும்ப குழுமத்தை விட வேறெந்த கம்பெனியும், குழுமங்களும் வளர்ந்துட கூடாது ... எங்க எஜமானர்களை விட வேறு யாரும் உயர்ந்துவிடக் கூடாது ... அப்படி வளர்ந்தா, உயர்ந்தா மண்ணை வாரி தூத்துவோம் .... இப்படிக்கு குடும்ப வண்டிகளை தேய்த்து கழுவும் உ பீ யி ஸ் .....


RAMAKRISHNAN NATESAN
நவ 21, 2024 14:01

வண்டிகளா ?? அல்லது .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை