உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது!: ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தமாட்டோம்

அமெரிக்க மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது!: ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தமாட்டோம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த சில மணி நேரங்களில் மத்திய அரசு பதிலடி தந்துள்ளது. 'நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதே இந்தியாவின் முன்னுரிமை. எனவே, எரிசக்தி இறக்குமதி கொள்கையில் மாற்றம் செய்ய முடியாது' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 2022 பிப்ரவரி முதல் ரஷ்யாவுக்கும், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் களமிறங்கின; ரஷ்யா மீது பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

வர்த்தக தொடர்பு

இதையடுத்து, ரஷ்யாவிடம் மேற்கொண்டு வந்த கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தக தொடர்புகளை இந்நாடுகள் தவிர்த்து வருகின்றன. இதனால், ரஷ்யா உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் இந்தியா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளுக்கு வழங்கி வருகிறது. இந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியால் கிடைக்கும் நிதியை, உக்ரைனுக்கு எதிரான போருக்கு ரஷ்யா பயன்படுத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், ரஷ்யாவின் வருவாயை தடுக்கும் வகையில், அந்நாட்டிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நம் நாட்டின் மீது கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். மேலும், இவ்வரி விதிப்பை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதம் என குறிப்பிட்டார். ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை தடுக்க, தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடு களுக்கு பல்வேறு வகைகளில் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். தன் நட்பு நாடுகளான ஐரோப்பிய நாடுகளையும் அவர் கூடுதல் வரி விதிக்குமாறு வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய டிரம்ப், இந்திய பிரதமர் மோடி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்து உள்ளார். எரிவாயு இறக்குமதி மேலும், இது குறித்து பேசிய டிரம்ப், 'இதை அவரால் உடனடியாக செய்ய முடியாது. இது ஒரு சிறிய செயல்முறை தான். ஆனால், இந்த செயல்முறை விரைவில் முடிவடையும். இப்போது சீனாவையும் இதே காரியத்தை செய்ய வைக்க வேண்டும்' என தெரிவித்தார். இது குறித்து, நம் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் இந்தியா உலகளவில் குறிப்பிடத்தக்க இடம் வகித்து வருகிறது. நிலையற்ற எரிசக்தி சூழலில் நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதே இந்தியாவின் நிலையான முன்னுரிமை. எங்கள் இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தின் அடிப்படையில் முழுமையாக வழி நடத்தப்படுகின்றன. எனவே, அதில் மாற்றம் செய்ய முடியாது. மேலும், இந்தியாவின் எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகளான நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாப்பான வினியோகங்களை உறுதி செய்வதே எங்களின் முன்னுரிமை. நாட்டின் எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துதல் மற்றும் சந்தை தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான வகையில் பல்வகைப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். அமெரிக்கா உடனான எரிசக்தி கொள்முதலை பொறுத்தவரை, பல ஆண்டுகளாக விரிவுபடுத்த முயன்று வருகிறோம். அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளாக சீரான வகையில் இது முன்னேற்றம் கண்டு வருகிறது. தற்போதைய அமெரிக்க அரசு, இந்தியா உடனான எரிசக்தி ஒப்பந்தத்தை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'ரஷ்யா உடனான வர்த்தக உறவுகளை துண்டிக்க இந்தியாவை கட்டாயப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சி சட்டவிரோதமானது. நியாயமற்ற, ஒருதலைபட்சமான இந்த அழுத்தங்களுக்கு அடிபணியாமல், இந்தியா - ரஷ்யா எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும்' என, ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வினியோகிக்கும் நாடுகளில் ரஷ்யா தற்போது முன்னிலை வகிக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் ரஷ்யாவிடம் இருந்து நாள் ஒன்றுக்கு, 16.2 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது, நாட்டின் எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கு. அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இருந்து, பிரதமர் மோடிக்கு நேற்று எவ்வித தொலைபேசி அழைப்பும் வரவில்லை. இருவரிடையே எவ்வித பேச்சும் நடந்ததாக தெரியவில்லை. ரண்தீர் ஜெய்ஸ்வால் மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் இந்தியாவின் உரிமை! இந்த விவகாரம் குறித்து, இந்தியாவுக்கான ரஷ்ய துாதர் டெனிஸ் அலிபோவ் கூறியதாவது: ரஷ்யா - இந்தியா இடையேயான உறவு, பரஸ்பர நலன்கள் அடிப்படையிலும், பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட வலுவான மற்றும் நம்பகமான கூட்டாண்மையின் அடிப்படையிலும் அமைந்தவை. எந்தவொரு இறையாண்மை கொண்ட நாட்டுக்கும், அதன் தேசிய நலன்களுக்கு பொருத்தமான வணிக மற்றும் பொருளாதார நட்பு நாடுகளை தேர்ந்தெடுக்கும் முழு உரிமை உண்டு. ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், அந்நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்மையே விளையும். இவ்வாறு அவர் கூறினார்.

உறவு பாதிக்காது!

ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவுக்கு மலிவான விலையில் கச்சா எண்ணெயை ரஷ்யா வழங்குவதால், அந்நாட்டின் பொருளாதாரம் பல பில்லியன் டாலரை சேமித்து, உள்நாட்டு பணவீக்கம் கட்டுக்குள் இருக்க உதவுகிறது. ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதலை நிறுத்தினால், அது இந்தியாவுக்கு பெரியளவில் கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும். மேலும், இந்திய நுகர்வோர்களுக்கான விலைகளும் அதிகரிக்கும். இந்தியா - ரஷ்யா இடையேயான உறவு காலத்தால் மாறாத நிலையான மற்றும் உத்தி சார்ந்த நட்புறவு. பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல ஆண்டுகளாக இந்த உறவு நீடித்து வருகிறது. எந்தவொரு நாடும், மூன்றாம் தரப்பின் அழுத்தத்தால் தன் நட்பு நாடுகளை தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற இறையாண்மை கொள்கையை ரஷ்யா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை ரஷ்யா மதிக்கிறது. இந்தியா - அமெரிக்கா மற்றும் இந்தியா - பிற நாடுகள் இடையேயான உறவுகளில் எழும் எந்த ஒரு ஏற்ற, இறக்கமும், இந்தியா - ரஷ்யா இடையேயான உறவை எவ்விதத்திலும் பாதிக்காது. இந்த உறவு, மற்ற நாடுகளுடனான உறவுடன் ஒப்பிட முடியாதது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

பேசும் தமிழன்
அக் 17, 2025 23:46

எங்களது நாட்டின் தேவைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறோம்..... அதை நிறுத்த சொல்ல நீங்கள் யார்...நீங்கள் சொல்வதை கேட்டு நடக்க இங்கே நடப்பது கான் கிராஸ் கட்சி ஆட்சி அல்ல.... மோடி அவர்கள் தலைமையிலான பிஜெபி கட்சி ஆட்சி.... அதனால் கொஞ்சம் வாலை சுருட்டி கொண்டு இருப்பது தான் உங்களுக்கு நல்லது.


மணிமுருகன்
அக் 17, 2025 23:17

அமெரிக்கா இவ்வளவு காலம் இல்லாமல தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்த மற்ற நாடுகளின் வர்த்தக உடன்படிக்கைகள் ஒப்பந்தங்களை கெடுக்க நினைப்பது அநாகரிகச் செயல்.


Ayappan
அக் 23, 2025 08:37

கிறிஸ்டியன் minded


சாமானியன்
அக் 17, 2025 19:29

பெங்களூர் கண்ணன் அவர்களே ! இந்தியா ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்க வேண்டாமா ? அதனால்தான் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வைத்துள்ளனர். இந்த உலகப் பொருளாதாரம் தற்போது புரிகிறதா ? அமெரிக்க அதிபர் இவ்வளவு முட்டாளாகவா இருப்பார் ? எதற்கும் எதற்குமோ முடிச்சு போடுகிறார் !


Venugopal S
அக் 17, 2025 15:16

இந்த வீராப்பு எல்லாம் எத்தனை நாட்களுக்கு தாக்குப் பிடிக்கும் என்று பார்ப்போம்!


N Sasikumar Yadhav
அக் 17, 2025 16:40

இன்டி கூட்டணி ஆட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் ட்ரம்பின் மிரட்டலுக்கு மண்டியிட்டிருக்கும் திராவிட மாடல் இன்டி கூட்டணி . பாரதத்தின் நல்லநேரம் நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்க தேசபக்தியுள்ள பாரதியஜனதா ஆட்சி நடக்கிறது . கோபாலபுர நிரந்தர கொத்தடிமைகளுக்கு எரிச்சலாக இருக்கிறது


Against traitors
அக் 17, 2025 16:49

கதறு


vivek
அக் 17, 2025 18:19

நீ இருநூறு ரூபாய்க்கு முட்டு குடுக்கும்வரை வேணு


krishna
அக் 17, 2025 21:48

IDHA 200 ROOVAA GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI EERA VENGAAYAM VENUGOPAL SOLLUVADHU MAHA KEVALAM.SINGA THALAIVAN ULAGIN NO 1 LEADER MODI PEYARI SOLLA KOODA UNNAI PONDRA MURASOLI THUDAITHA MOOLAYODU THIRIUM KOMALIKKU ARUGADHAI ILLAI.UN LEVEL THUNDU SEATTU SENGAL THIRUDAN MATTUME.


krishna
அக் 17, 2025 22:12

SIR NEENGA VERA . VENUGOPAL 200 ROOVAA COOLIKKU EDHA VENA VIPPARU.MUTTU KUDUPPADHAI EPPADI NIRUTHUVAAR.


Saai Sundharamurthy AVK
அக் 17, 2025 14:01

50 சதவிகித வரி போட்டு விட்டு வாயை மூடிக் கொள்ளாமல், டிரம்ப் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த வாரம் தங்கள் சம்பளம் கிடைக்காததால் உணவு வங்கிகளில் அமெரிக்க ராணுவ வீரர்கள் வரிசையில் நிற்கிறார்கள். "மிகப்பெரியது" என்று தன்னை அழைத்துக் கொள்ளும் நாடு இப்போது பசிக் கொடுமையால் வரிசையில் நிற்கிறது. இந்தியாவை ஒரு இறந்த பொருளாதாரம் என்று அழைத்ததற்காக டிரம்பை கடவுள் தண்டித்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவில் சாமானியர்கள் துன்பப்படுகிறார்கள். ஆனால், அவர்களின் ஜனாதிபதி பொய் சொல்கிறார், பெருமை பேசுகிறார், வெட்கமின்றி சந்தோசமாக அனுபவிக்கிறார் !!!!


RAMESH KUMAR R V
அக் 17, 2025 13:41

இந்தியா தற்போது தேசப்பற்றுமிக்க மாமனிதர்களின் கையில் உள்ளது அது இந்தியன் இறையாண்மைக்கு எதிராக என்றும் இருக்காது என உறுதியாக நம்பலாம்.


மொட்டை தாசன்...
அக் 17, 2025 13:30

அதான் 25% அதிகப்படியான வரிபோட்டச்சில்ல இனியும் எதற்கு எண்ணை இறக்குமதியை பற்றி பேசவேண்டும் ?


kannan
அக் 17, 2025 12:55

ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல் வாங்குவதால் ஏழை இந்துக்கள் ஒருவருக்கேனும் பத்துப் பைசா பிரியோஜனம் உண்டா? பெட்ரோல் விலை சர்வதேச விலைப்படி நிர்ணயம் செய்கிறார்களாம், மூன்று வருடமா சர்வதே விலையில் மாற்றமில்லையா? ஒரு பயல் பதில் சொல்லமாட்டான்.


vivek
அக் 17, 2025 14:31

அறிவிலி காங்கிரஸ் வாங்குன ஆயில் பாண்ட் கடனை எவன் அடைப்பான்...


krishna
அக் 17, 2025 21:50

KANNAN 200 ROOVAA OOPIS CLUB KUMBALUKKU PUDHIYA VARAVU UNAKKU PETROL DIESEL PRICE KURITHU ENNA THERIUM.


Kailasam
அக் 17, 2025 12:16

guts இல்ல ..


vivek
அக் 17, 2025 14:32

இருநூறு வாங்குற உனக்கு எதுக்கு guts..


Ramesh Sargam
அக் 17, 2025 11:14

டிரம்ப் நவீன கால ஹிட்லர். ஹிட்லர் தன்னுடைய எதிரிகளை கண்மூடித்தனமாக கொன்றுகுவித்தான். டிரம்ப் அமெரிக்காவை விட அதிக வளர்ச்சி அடையும் நாடுகளை அடிபணியவைக்க அவர்கள் நாட்டு பொருட்கள் மீது அதிகவரிவிதித்து மிரட்டுகிறார். ஹிட்லர் சோவியத் படைகள் நெருங்கி வந்தபோது, இனி தன்னுடைய அதிகாரம், அக்கிரமம், அராஜகம் பயனளிக்காது என்று தெரிந்து ஹிட்லர் விஷம் குடித்த தனது மனைவி ஈவா பிரவுனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார், மேலும் ஹிட்லர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இப்பொழுதைய நவீன ஹிட்லருக்கு அந்த நிலைமை வரவேண்டாம் என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். டிரம்ப் ஒரு நல்ல மனிதர். அவருக்கு புரியும்வகையில் யாராவது அறிவுரை கொடுக்கவேண்டும். அவ்வளவுதான்.


Kailasam
அக் 17, 2025 13:37

வெத்து வாய் பேச்சுக்கு ஒரு குறைச்சல் கிடையாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை