| ADDED : நவ 21, 2025 10:16 PM
ஜோகன்னஸ்பர்க்; தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.தென் ஆப்ரிக்காவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க இன்று(நவ., 21) பிரதமர் மோடி விமானம் மூலம் கிளம்பினார். மாலை அவர் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு, கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்அப்போது, டில்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் சவுதி அரேபியாவில் நடந்த பஸ் விபத்தில் பல இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்ததற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், 'நாம் விவாதிக்க நிறைய இருக்கிறது, மேலும் நமது உறவு மிகவும் வலுவானது. நாம் மேலும் வலுப்படுத்தக்கூடிய பொருளாதார உறவும், நமது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகளும் எதிர்காலத்தில் மிக முக்கியமானவை என்று நான் நினைக்கிறேன். இன்று நமது கலந்துரையாடலை எதிர்நோக்குகிறேன். இவ்வாறு அந்தோனி அல்பானீஸ் கூறினார்.