உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தீர்மானம் : துணை நிலை கவர்னர் ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தீர்மானம் : துணை நிலை கவர்னர் ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீர்மானத்திற்கு துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ல் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.இந்நிலயில் 90 தொகுதிகளை கொண்ட ஜம்மு - காஷ்மீருக்கு கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜ., 29 தொகுதிகளை பிடித்தது. தேசிய மாநாடு கட்சியின் ஒமர் அப்துல்லா கடந்த 16-ம் தேதி பதவியேற்றார்.இந்நிலையில் அக்.,18 தேசிய மாநாடு கட்சியின் முதல் அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக மாநில அந்தஸ்தை வலியுறுத்தி முதல்வர் ஒமர் அப்துல்லா விரைவில் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக தேசிய மாநாடு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
அக் 19, 2024 21:48

கெடைக்கும். ஆனா கெடைக்காது. மனதுக்குள் தனி நாடு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வெளியில் மாநில அந்தஸ்து என ரீல் சுற்றுகிறார்கள்.பாக் கும் பங்களாதேஷும் கொடுக்கும் தலைவலிகளை போதும்.


தத்வமசி
அக் 19, 2024 21:38

பாண்டிச்சேரி மற்றும் தில்லி யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுகள் பல முறை அல்ல பல ஆண்டுகளாக இந்த கோரிக்கையை விடுத்து வருகின்றன. ஆனால் இதுவரை இல்லை. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமா என்றால் இப்போதைக்கு இல்லை. இவர்கள் மாநிலமாக இருந்த வரை என்ன செய்தார்கள் ? இவர்கள் தான் பரம்பரை குடியாட்சி மன்னர்கள் ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா மற்றும் இவர் ஓமர் அப்துல்லா என்று மூன்று தலைமுறையாக ஜம்மு காஷ்மீரை ஆண்டு வருகிறார்கள். இவர்களின் சாதனை என்ன ? அங்கிருந்த காஷ்மீரிகளை விரட்டி அடித்தது தான் இவர்கள் செய்த சாதனை. இவர்களுக்கு எதற்கு மாநில அந்தஸ்து ? தேவையே இல்லை.


GMM
அக் 19, 2024 21:21

மாநில அந்தஸ்து கொடுக்கும் முன் மாநில அரசியல் சாதி, மத மோதல், குண்டு வெடிப்பு , சட்டவிரோத செயல்கள் அதிகம் இல்லாமல் இருக்க உறுதி கூற முடியுமா. ? மாநிலங்களுக்கு தேச பாதுகாப்பு பற்றி பொறுப்பு நிர்ணயிக்கவில்லை. காஸ்மீர் படுகொலைகள் மறக்க முடியாது. சட்ட ஒழுங்கு சீர் கெட்டு இருந்தால், மாநில அந்தஸ்தை திரும்ப பெறவேண்டும். அல்லது மாநில பாதுகாப்பு மத்திய படையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். சட்ட மசோதாவை கட்டாயம் ஏற்க வேண்டும் என்ற சட்ட சிக்கல் இருந்தால், ஜம்மு காஷ்மீருக்கு தற்காலிக மாநில அந்தஸ்து கொடுக்க ஆய்வு செய்யலாம்.


கிஜன்
அக் 19, 2024 21:15

ஓமருக்கு தொந்திரவு ....பா.ஜ.க அல்ல .... ஆந்த்ராபி தான் .... நேற்றே அவரும் அவர் மகளும் ஆரம்பித்துவிட்டார்கள் .... ஏன் சிறப்பு அந்தஸ்து கேட்கவில்லை .என...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை