வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அப்படி பார்த்தால் முதலில் இந்தியர்களிடமிருந்து முறையான ஆளுமை பயிற்சி பெறவேண்டியவர் இப்பொழுதுள்ள அதிபர் ட்ரம்ப். அவருக்கு எப்பொழுது பயிற்சியை ஆரம்பிக்கலாம் சொல்லுங்க.
வெளிநாட்டு நிபுணர்களை வேலைக்கு அமர்த்துவதன் நோக்கமே செலவு குறைவு என்பதால் தான் என்று வைத்துக் கொண்டாலும் உண்மையில் அமெரிக்கர்களிடையே படிக்கும் பழக்கம் சதவிகித அடிப்படையில் மிக மிகப் குறைவே! அப்படியே படித்து வந்து விட்டாலும் தெளிவு நிறைந்தவர்கள் என்பதும் மிகப் குறைவு. அவர்களை வேலைக்கு அமர்த்தி, பயிர்ச்சி கொடுத்து தேற்றுவது என்பது கால விரயம், நேர விரயம், பண விரயம் தான். அதனால் தான் அமெரிக்க கம்பெனிகள் வெளி நாட்டவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கிறது. அதாவது உதாரணமாக நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண் எடுத்து முதல் தேர்விலேயே தேர்ச்சி பெறுபவர்கள் தான் அவர்களுக்கு வேண்டும்.
கிராமங்களில் கூறுவார்கள் ஆசான் கீழே விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டாமல் பார்த்துக்கொண்டார் அது போல பொது இடங்களில் சொல்லக்கூடாததை சொல்லிவிட்டு இன்னொருவரை வைத்து பூசி மொழுகிறார்..சொன்னதில் உண்மை உள்ளது அதே நேரம் அதிபர் சொல்லியது தான் தவறு...
அமெரிக்காவின் பேராசை பிடித்த கார்பரேட்கள் செய்த வேலை இது. சீனாவுக்கு தொழிற்சாலைகளை நகர்த்தி அமெரிக்க தொழிற்சாலை ஊழியர்களை ஒரம் கட்டுனாங்க. அப்புறம் சாஃப்ட்வேர் தொழிலுக்கு இந்தியர்களை அமர்த்தி அமெரிக்காவில் அந்த தொழில் செஞ்சவங்களும் ஃபணால். இப்போ அங்கே இருக்கிறவங்க பீட்சா டெலிவரி, ஓலா ஓட்டுதல், போன்ற gig வேலைகள் செஞ்சு பொழைக்கும் நிலைமைக்கு வந்துட்டாங்க. அதன் வெளிப்பாடுதான் ட்ரம்ப் அமெரிக்க அதிபரானது.
பெரும்பாலான அமெரிக்கர்களுள் முறையான படிப்பே இல்லை இதில் கொலை மற்றும் திருட்டு தவிர வேறென்ன திறமைகள் உள்ளதாம்?!
உலகிலேயே இந்தியன் இல்லையென்றால் உலகமே ஸ்தம்பித்து விடும் நிலைமை வந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இப்போதாவது தெரிந்ததே புத்தி வந்ததே என்றுதான் ஆச்சிர்யப்பட வேண்டும் இனி இந்தியனை பகைத்துக்கொள்ள வேண்டாம் அவனை அனுசரித்துப்போனால் எந்த நாடும் எங்கிருந்தாலும் செழிக்கும் அவனும் நன்றாக வாழ்வான் வாழ்க்கை வையகம் வாழ்க மனித குலம்
அமெரிக்கர்களுக்கு திறமை இல்லை என்பது அவரை வைத்து சொல்கிறார் போல காரணம் சமீபத்தில் நடந்த வரி விதிப்பு ஒன்று போதும் அது போல இன்னும் பல. .......
ஜார்ஜியாவில் கட்டப்பட்டு வரும் எல்ஜி LG மற்றும் ஹூண்டாய் Hyundai நிறுவனங்களின் கூட்டு பேட்டரி உற்பத்தி ஆலை கட்டுமான தளத்தில் அண்மையில் நடந்த ஐசிஇ ICE - U.S. Immigration and Customs Enforcement சோதனை தொடர்பான குழப்பம் அமெரிக்க தென்கொரிய வர்த்தக ஒப்பந்தத்தில் பெரும் முட்டுக்கட்டை ஆனது. இச்சோதனை மாபெரும் கொள்கை ரீதியான தோல்வியாகவும் பொருளாதாரத் தடங்கலாகவும் கருதப்படுகிறது. இது பற்றிய பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் அளிக்கையில், தென்கொரியாவை சமாதானப்படுத்தும் விதமாக பேசிய டிரம்ப்பின் வார்த்தைகள் தான் தலைப்பாக வந்துள்ளது.
H1B என்பது வேலை விசா. அந்த வேலைக்கு அமெரிக்காவில் ஆள் எடுத்து வேலை செய்யலாம் - ஆனால் சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டும். தவிரவும் அது போன்ற வேலைகள் செய்ய பலர் முன்வரமாட்டார்கள். உற்பத்தி செலவு குறைவு என்பதால் பல தொழில்கள் அமெரிக்காவை விட்டு சீனா, தைவான், கொரியா, வியட்நாம் போன்ற வெளிநாடுகளை நோக்கி படையெடுத்தன.