உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிறப்பால் குடியுரிமை பெற டிரம்ப் தடை: மருத்துவமனைகளை நாடும் இந்திய கர்ப்பிணிகள்

பிறப்பால் குடியுரிமை பெற டிரம்ப் தடை: மருத்துவமனைகளை நாடும் இந்திய கர்ப்பிணிகள்

வாஷிங்டன்: பிறப்பால் அமெரிக்க குடியுரிமை வழங்குவதற்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவு பிப்.,19 ல் நடைமுறைக்கு வர உள்ளதால், அதற்குள் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து இந்தியாவை சேர்ந்த கர்ப்பிணிகள் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர்.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், 20ம் தேதி பதவியேற்றார். முதல் நாளிலேயே, பிறப்பால் குடியுரிமை வழங்கப்படுவதில் சில கட்டுப்பாடுகளை விதித்து அவர் உத்தரவு பிறப்பித்தார். தாய் அல்லது தந்தையின் குடியுரிமை எந்த நிலையில் இருந்தாலும், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு, அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தில், 14வது திருத்தம் இந்த உரிமையை வழங்குகிறது. ஆனால், இதில் சில கட்டுப்பாடுகளை விதித்து, டொனால்டு டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்கப் படாது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t7fw66ms&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வழங்க முடியாதுஅதுபோல, தற்காலிகமாக, அதாவது வேலைக்காக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் தானாகவே குடியுரிமை வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, பிப்., 19 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக, அதிபரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அமெரிக்காவில் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தற்காலிகமாக எச்.1பி மற்றும் எல்1 விசா பெற்று வசித்து வருகின்றனர். ஏராளமானோர், நிரந்தர குடியுரிமை அளிக்கும் கிரீன்கார்டு கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். தற்போது டிரம்ப்பின் புது உத்தரவு காரணமாக ஏராளமான தாய்மார்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் கர்ப்பிணியாக இருக்கும் ஏராளமான தாய்மார்கள் டாக்டர்களை அணுகி உள்ளனர். புதிய சட்டம் அமலுக்கு வரும் பிப்.,19க்குள் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது: ஏராளமான கர்ப்பிணிகள் எங்களை தொடர்பு கொண்டு முன்கூட்டியே குழந்தை பெற்றுக் கொள்வதுகுறித்து கேட்கின்றனர். ஒரு சிலருக்கு கர்ப்ப காலம் முடிவடைய இன்னும் மாதம் உள்ளது.ஏழு மாத கர்ப்பிணி ஒருவர் கணவருடன் வந்து, முன்கூட்டியே குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து பேசினார். அவருக்கு குழந்தை பிறக்க மார்ச் மாதம் வரை அவகாசம் உள்ளது. அதுவரை காத்திருக்க அவர் விரும்பவில்லை.முன்கூட்டியே குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியம் இருந்தாலும், அதனால், தாயார் மற்றும் குழந்தைக்கு சிக்கல் ஏற்படும். போதிய நுரையீரல் வளர்ச்சிஇல்லாதது, தாய்ப்பால் கொடுப்பது, எடை குறைந்த குழந்தை பிறப்பது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Mohan
ஜன 24, 2025 13:27

அமெரிக்காவுலயும் திராவிஷ மாடல் போன்ற வோட்டுக்காக எல்லாவற்றையும் தாரை வார்க்கும் ஜனநாயக கட்சியும், அமெரிக்க தென்திசை வலதுசாரி தத்துவத்திற்காக சட்டம் மாற்றும் குடியரசு கட்சியும் வெறி பிடித்து அலைகின்றன. ஆனால் பல அமைப்புகளில் நிலை கொண்டுள்ள அமெரிக்க நீதிமன்றங்களின் நீதிபதிகள் சட்டத்தின் காவலர்களாக இருப்பதால், சாமான்யர்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது. ஹூம்... இந்தியாவில்??????.


Arun Pradeep
ஜன 24, 2025 08:19

இதெல்லாம் ஒரு பிழைப்பு ....


Dharmavaan
ஜன 24, 2025 08:15

இவர்கள் வெளி நாடு போக காரணம் இட ஒதுக்கீடு .சரியான வேலை கிடைக்காதது முஸ்லிம்களின் தனி சலுகை ஒதுக்கீடு போன்றவையே ..மினாரிட்டி சலுகைகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் ஜனாதிக அதிகரிக்க இவர்களே காரணம் அதனால் வேலையின்மை


T. GANESAN
ஜன 24, 2025 16:37

உண்மைதான்


Jagan (Proud Sangi)
ஜன 24, 2025 04:12

அமெரிக்காவில் கேட்டவுடன் சிசேரியன் செய்ய மாட்டார்கள். நண்பரின் மனைவிக்கு 23 மணிநேரம் வலியில் இருந்த பின் குழந்தை பிறந்ததாம், அங்கு மருத்துவ காரணங்கள் அன்றி சிசேரியன் நடக்காதாம். ஆஸ்பத்திரி மற்றும் டாக்டர்கள் liability இன்சூரன்ஸ் அது போன்றவற்றை ஏற்காது என்று சொல்கிறார்கள்


சிட்டுக்குருவி
ஜன 24, 2025 00:57

வேறு ஒருநாட்டில் வசிக்கபொகும் ஓவ்வருவரும் அந்தநாட்டின் அடிப்படை தனிமனித உரிமை சட்டங்களை தெரிந்து கொள்வது அவசியம்.அது தெரியாததால் ஏற்படும் குழப்பங்கள் தான் இவைகள்.அமெரிக்க அரசியல் அமைப்பு சட்டம் 14 வது சரத்து படி All persons born or naturalized in the United States, and subject to the jurisdiction thereof, are citizens of the United States and of the State wherein they reside. No State shall make or enforce any law which shall abridge the privileges or immunities of citizens of the United States nor shall any State deprive any person of life, liberty, or property, without due process of law nor deny to any person within its jurisdiction the equal protection of the law. இதை மாற்றுவதற்கு எந்த ஒரு ஜனாதிபதிக்கும் தனிப்பட்ட உரிமைகிடயாது.இதை மாற்றவேண்டும் என்றால் அரசியல் அமைப்பு சட்டத்தையே மாற்றவேண்டும்.அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற சட்டசபை என்று சொல்லக்கூடிய காங்கிரசால் நான்கில்மூன்று சதவீத அங்கத்தினர் ஒப்புதல் அளித்துசட்டம் இயற்றப்பட்டு,மேல்சபை ஒப்புதல் அளித்து,ஜனாதிபதியால் கையொப்பமிட்டு,ஒரு கால நிர்ணயம் அளித்து நான்கில் மூன்று சதவீத மாநில அரசுகளால் ஒப்புதல் அளித்தால்மட்டுமே அது சாத்தியமாகும்.அப்படி ஒரு நிகழ்வுக்கு அமெரிக்காவில் நடக்க இப்போது அல்ல இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கும் வாய்ப்பே இல்லை.இப்போது நடப்பதெல்லாம் வெறும் சலசலப்பே.மக்கள் பீதி அடைய வேண்டாம்.


வல்லவன்
ஜன 24, 2025 00:01

y திஸ் கொல வெறி


கிஜன்
ஜன 23, 2025 22:09

தனி நபர் வருமானம் .... நேர்மையான வாழ்வு .... சகமனிதனை மதித்தல் ...எல்லாம் இருந்தால் அவர்கள் ஏன் அங்கு ஓடப்போகிறார்கள் ....


Raj S
ஜன 23, 2025 21:43

இது நடக்க வாய்ப்பு கிடையாது... அது அவருக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும்...


Ramesh Sargam
ஜன 23, 2025 21:40

தாயகத்தை ஒதுக்கியவர்களுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். இனிமேலாவது தாயகத்தை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.


vijay
ஜன 23, 2025 21:34

அப்படி என்ன அமெரிக்கா பேரிக்கா என்று அலையுறாங்க?. கம்ப்யூட்டர், மென்பொருள், மற்றும் பொறியியல் சம்பந்த படிப்புகள் படிச்சிட்டு ஏற்கனவே அமெரிக்கா போன்ற நாட்டில் வேலை செய்வோரும், இந்தியாவில் வேலை பார்ப்போரும், தற்போது படிப்போருக்கும் கூட கனவே அமெரிக்காவில் வேலை பார்ப்பதே வெறியாக இருக்குது. நான் பெரிசா படிக்கல, ஆர்ட்ஸ் காலேஜ் படிச்சுட்டு நல்ல சம்பளம் கிடைக்கும் வேலை பார்க்கிறேன். இந்தியாவில் இப்போது பெரிய கம்பெனிகள் வந்துருச்சு, இன்னும் வரும். TCS , இன்போசிஸ் மற்றும் பல பெரிய கம்பெனிகளில் நல்ல சம்பளம் வாங்குவோர் கூட அமெரிக்காவில் சென்றுதான் வேலை பார்க்கணும் என்று விருப்புகிறார்கள், இங்குள்ள கம்பெனியே ப்ராஜெக்ட் ஏதாச்சும் கொடுத்து 6 மாசம், 1 வருஷம்னு அமேரிக்கா அனுப்பிச்சா அதை கெட்டியா புடிச்சிட்டு அமெரிக்கா போயி வேலை செய்யறப்போவே, அங்கே செட்டிலாக அமெரிக்காவின் கம்பெனிகளில் வேலை தேடுகிறார்கள். ஏன்யா ஏன்?. சம்பளம் அதிகம் கிடைச்சாலும், அங்கு வீடெடுத்து தங்கும் செலவு திங்கும் செலவு சமாளிக்கலாம் என்று நினைக்கிறேன், வருமான வரி, மின் செலவு, பிள்ளை படிப்பு செலவு எல்லாம் அதிகம். ஒருவேளை அமேரிக்கா நகரங்கள், சாலைகள், சுற்றுப்புறங்கள், சுத்தமா இருக்குறது புடிச்சி போவுதோ?. நம்மூருல சுத்தபத்தமா வச்சுக்கோன்னா பெரும்பாலான மக்க கேட்கமாட்டாய்ங்க, சட்டம் போட்டோம்னாக்க சண்டைக்கு வருவாங்க, போராடுவாங்க. இவ்வளவு ஏன் மேல்நாட்டு சாலைகள், சுற்றுப்புறங்கள் சுத்தபத்தமா இருக்கறது கண்டு மகிழும் இளசுகள் அதற்காக சட்டங்கள், தண்டப்பணம் கட்டணும்னு உத்தரவு போட்டோம்னா சோசியல் மீடியாவுல உக்காந்து கதறுவாய்ங்க. அங்கெல்லாம் உள்ளூர் அமெரிக்கர்களே அவுங்க நாட்டு போலீசு ரோட்டில் வச்சு ஏதாச்சும் சொன்னா, கேட்டா ஒழுங்கா பதில் சொல்லணும், சத்தம் போட்டு பேசினால் கூட கார்ல ஏத்தி லாக்அப்-ல வச்சிடுவாங்க. இதுல போதாக்குறைக்கு இனவெறி கொண்ட அந்நாட்டு மக்கள் பலர், அங்கு அந்நாட்டு குடியுரிமை பெற்ற நம்மவர்களை அவ்வப்போது திட்டுவது நடக்குது. என்ன செய்ய நம்ம நாட்டு ஊழல்வாதிகளும், தெரிந்தும் ஆட்டுமந்தைகள் போல அவர்களுக்கு வோட்டு போடும் மக்களும் இருக்கும் வரை.............பிரச்சினைதான்.


Kasimani Baskaran
ஜன 24, 2025 05:45

ஆனால்... அங்கு போலீஸ் உடையில் கல்லூரிக்குள் சென்று வீடியோ எடுத்து மிரட்டி பணிய வைத்து, சில்மிஷம் செய்து சாருக்கு படையல் செய்ய அனுப்புமளவுக்கு பல்கலைக்கழகம் இருக்காது. விசாரணைகள் நேர்மையாக நடக்கும், நீதித்துறையும் கூட அவ்வளவு எளிதாக விட்டுவிடாது. அடிப்படையில் அதிகாரிகள், காவல்துறை, விசாரணை அமைப்புக்கள் நேர்மையாக இருக்கிறார்கள். சுதந்திரமாக கேள்வி கேட்க முடியும். அடிப்படை கல்வி என்பது அனைவருக்கும் சிறப்பான முறையில் கற்ப்பிக்கப்படுகிறது மிக மிக குறைவான தனியார் பள்ளிகளே இருக்கிறது. இன்னும் பல பல.


முக்கிய வீடியோ