உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது; கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிரம்ப் மிரட்டல்

இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது; கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிரம்ப் மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இனி இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது. அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். வாஷிங்டனில் நடந்த ஏ.ஐ., மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் பணியாளர் தேர்வு குறித்து அறிவுறுத்தலை வழங்கினார். அப்போது, அவர் பேசியதாவது; ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட முன்னணி டெக் நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை கட்டுகின்றன. இந்தியாவில் இருந்து ஊழியர்களை நியமிக்கின்றன. அயர்லாந்தில் லாபத்தை சேர்க்கின்றனர். ஆனால் அமெரிக்க தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1fygpiha&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்கா வழங்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி முன்னணி நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டுகின்றன. ஆனால், வெளிநாடுகளிலேயே அதிக முதலீட்டை செய்கின்றன. இனி அது நடக்காது.https://www.youtube.com/embed/TxtgSJi4p54' title=எனவே, அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளைக் கட்டுவதையும், இந்தியர்களை வேலைக்கு எடுப்பதையும் விட்டு விட்டு, உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Gomathi
ஜூலை 25, 2025 08:29

But Americans will expect more salary. it will be a like giving food to elephant everyday... so that mostly indians are given job as they agree for moderate level salary also. Thats why every developed and developing countries have more indian workers... If americans are to be given job, theg will have to pay 3 persons ( Indian) salary to one person (american).


சண்முகம்
ஜூலை 25, 2025 00:38

H1 B விசாவில் வேலை செய்பவர்களுக்கு அமெரிக்கர்களை விட மிகக் குறைந்த ஊதியம். அதனால் தான் கிராக்கி.


Raj S
ஜூலை 24, 2025 22:38

டிரம்ப் சொன்னது, விசாவுல கூட்டிட்டு வரவேண்டாம்... அமெரிக்கன்னா அதுல எல்லா நாட்டுல இருந்தும் வந்து அங்க அமெரிக்கா பிரஜை ஆனவன்னு அர்த்தம்... அதுல இந்தியாவுல இருந்து போனவனும் இருப்பான்...


Matt P
ஜூலை 24, 2025 21:03

இந்தியர்களை வேலைக்கு எடுத்து தான் ஆக வேண்டும் என்றா வேலைக்கு எடுக்கிறார்கள். அமெரிக்காவில் குறிப்பிட்ட வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் இருப்பதாலும் குறிப்பிட்ட படிப்பு படித்தவர்கள் குறைவாக இருப்பதாலும் இந்தியாவில் வருபவர்களால் இங்கிலீஷு தெரிந்திருப்பதால் மொழி பிரச்னை இல்லாமல் இருக்காது என்பதாலும் தான் இந்தியர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி சம்பளமும் குறைத்து கொடுக்கப் படும். பல உடலுழைப்பு வாய்ந்த வேலைகளுக்கு கூட வெளிநாட்டு அகதிகளை நம்பி தான் அமெரிக்கா இருக்கிறது. அந்த வேலைகளை யாரும் தட்டி பறிக்க முடியாது. இந்தியர்களை வேலைக்கு எடுக்காவிட்டால் கம்பெனிகளை நடத்த முடியாமல்ல் போகும்போது அமெரிக்காவுக்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம்.


Manon
ஜூலை 24, 2025 20:13

If he says no foreigners should be employed, it is o.k he his taking interest in his own countrymen. Why Indians not to be employed.? His threatening is fear mongering.


AMMAN EARTH MOVERS
ஜூலை 24, 2025 19:35

மிகவும் சரியான முடிவு


kumarkv
ஜூலை 25, 2025 15:14

குறிப்பாக முஸ்லீம்களை வேலைக்கு எடுக்ககூடாது என்று கூறியுள்ளார்


தாமரை மலர்கிறது
ஜூலை 24, 2025 19:15

அமெரிக்காவில் வேலை செய்யும் தொண்ணூறு சதவீத இந்திய இளைஞர்கள் யாரும் கோடிங் எழுதுவதில்லை.வெறுமனே,அங்கிருந்துகொண்டு இந்தியர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். இதை அமெரிக்கர்கள் எளிதாக செய்ய முடியும். ஆனால் அவர்களுக்கு சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டும். இதனால் தொழில் நுட்ப திறனாளிகள் என்ற போர்வையில் குறைந்த சம்பளத்திற்க்கு இந்தியர்களை பெரிய நிறுவனங்கள் எடுக்கின்றன. ட்ரம்ப் மிரட்டுவதில் காரணம் உள்ளது.


Balamurugan
ஜூலை 24, 2025 17:45

அமெரிக்காவில் மனித வளம் இல்லை. பெரும்பான்மையானோர் தங்களது 10ம் வகுப்பு கூட முடிப்பதில்லை. சரி சற்றே கடினமான மற்றும் மூளையை உபயோகித்து வேலை செய்யும் இன்ஜினியரிங் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு கூட அமெரிக்கர்கள் கிடைப்பதில்லை. இந்த பைத்தியக்காரன் எந்த எண்ணத்தில் இப்படி உளறுகிறான் என்று தெரியவில்லை.


Jagan (Proud Sangi )
ஜூலை 24, 2025 18:26

1969ல் சந்திரனுக்கு மனிதனை அனுப்பிய நாடு அமெரிக்க. இப்ப கூட நாசாவில் 50% இந்தியர்கள் என்று ஒரு புரளி ஓடிக்கொண்டிருக்கு. ஒரு புண்ணாக்கும் இல்லை எனது மாமா நாசாவில் தான் பணிபுரிகிறார் -அவர் சொன்னது. மேலும் ஆப்பிள், கூகிள் , மைக்ரோசாப்ட் எல்லாம் வெள்ளைக்காரன் தொடங்கி வளர்த்தது. கார் முதல், டெலிபோன் GPS , சட்டலைட் எல்லாமே அமெரிக்கா சொந்த மூளை தான். தமிழ் நாட்டில் வெளி மாநிலத்தவன் கூலி வேலை செய்வது போல தான் இந்திய சீன கொரியர்கள். ஆள் இல்ல பற்றாக்குறையில் தான் நம்ம வண்டி ஓடுது


ஆரூர் ரங்
ஜூலை 24, 2025 17:18

ரொம்ப துள்ளினால் ஆப்பிள் கூகிள் தலைமையகத்தையும் அமெரிக்காவை விட்டு வெளியே போய் விடுவார்கள். ஒரு காலத்தில் இந்திய பொருளாதாரத்த த் திறந்துவிட வேண்டும் என கட்டாயப்படுத்திய அமெரிக்கா இப்போது நேரெதிர் நிலையை எடுப்பது காலத்தின் கோலம்.


Nachiar
ஜூலை 24, 2025 16:26

அந்தந்த நாடுகள் தங்கள் சுதேசிகளுக்குத்தான் முதல் இடம் கொடுக்க வேண்டும். லாப நோக்கத்துக்க விதேசிகளை தொழிலில் அமர்த்துவது தவறு. சுதேசிகள் அதிலும் படித்த வேலைஇன்றி தவிக்கிறார்கள். இதில் ட்ரம்ப் சொன்னதில் என்ன தவறு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை