உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மீண்டும் மிரட்டல்!

பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மீண்டும் மிரட்டல்!

நியூயார்க்: அமெரிக்க டாலருக்கு போட்டியாக தனி கரன்சியை உருவாக்க மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்; இல்லை என்றால் 100% வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை தோற்றுவித்துள்ளன. இதில் புதிய நாடுகள் சிலவும் சமீபத்தில் இணைந்துள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்டபோது, இந்த நாடுகளுக்கென பிரத்யேக கரன்சி உருவாக்கப் படும் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதில் சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு பதிலாக பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=awmhwon4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த அறிவிப்பை செயல்படுத்த மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அவரது தடாலடி அறிக்கை:

சர்வதேச வர்த்தகத்துக்கு அமெரிக்க டாலரை பயன்படுத்துவதில் இருந்து விலகிச் செல்ல முயற்சிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் யோசனையை, நாம் வேடிக்கை பார்த்த காலம் முடிந்து விட்டது. இந்த நாடுகளிடம் ஒரு உறுதிமொழியை நாங்கள் கோரப் போகிறோம். அவை ஒரு புதிய பிரிக்ஸ் கரன்சியை உருவாக்க மாட்டேன் என்றும், வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்க மாட்டேன் என்றும் உறுதியளிக்க வேண்டும். இல்லையெனில், அவை 100% வரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.மேலும் அற்புதமான அமெரிக்க பொருளாதாரத்தில் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பையும் இழக்க வேண்டி இருக்கும். அவை வேறு எந்த முட்டாள் நாட்டைத் தேடிச் செல்லலாம். அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த கரன்சியும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.அப்படி முயற்சிக்கும் எந்த நாடும் வரிகளைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை, பிரிக்ஸ் நாடுகளுக்கு நேரடியாக விடப்பட்டுள்ள மிரட்டல் என்று கருதப்படுகிறது. இதே போன்றதொரு அறிக்கையை பதவியேற்பதற்கு சில வாரங்களுக்கு முன்பும் அவர் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

subramanian
ஜன 31, 2025 21:58

டிரம்ப் ஏதாவது சொல்ல வேண்டும். அப்புறம் புதுசா பதவி ஏற்றதற்கு என்ன மரியாதை? ரஷ்யா மிரட்டல் விடுத்து உக்ரைனை ஆக்ரமிக்கிறது. சீனா தைவானை மிரட்டுகிறது. நண்டு கொழுத்தால் வளையில் தங்காது. மனித நேயம் மற்றும் சுயகட்டுப்பாடு ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாடும் கடைபிடிக்க வேண்டும்.


ராமகிருஷ்ணன்
ஜன 31, 2025 19:58

எங்களுக்கு முருகன் டாலர், பிள்ளையார் டாலர், ஐயப்பன் டாலர்கள் என்று தான் தெரியும். அமெரிக்க டாலரை நீங்களே வச்சுக்கோங்க.


ஆரூர் ரங்
ஜன 31, 2025 18:55

ஆண்டுக்கு பல பில்லியன் டாலர்கள் அச்சடித்துத் தள்ளுகிறார்கள். அப்படியும் அதன் மதிப்பு ஏறுவதற்கு காரணம் சாம தான பேத தண்ட வழிமுறைகள் மூலம் அதனை கட்டாய உலக செலாவணியாகப் பயன்படுத்தப்படுவதுதான். ஆனால் எதுவும் நிரந்தரமல்ல. வரலாற்றில் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமற்போனது நினைவிருக்கட்டும்.


Ramesh N
ஜன 31, 2025 14:38

அது என்ன‌ டாலர் மட்டும் தான் வாங்குவதற்கும் செலவுகள் செய்வதற்கும் பயன் படுத்த வேண்டும் என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது நம் நாட்டு முடிவை நாம் தான் தீர்மானிக்க முடியும் வேறு ஒருவர் தீர்மானிக்க முடியாது வேண்டுமென்றால் அவர்கள் அந்தந்த நாட்டுக்கு போகும் போது அவர்களுடைய அந்த நாட்டு கரன்சியை பயன்படுத்திக் கொள்ளட்டும் இந்த அமெரிக்காவின் பைத்தியக்காரத்தனத்துக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது.


Ramesh Sargam
ஜன 31, 2025 13:00

நான் மீண்டும் டிரம்புக்கு கூறிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்கள் மிரட்டல் எல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும். முதலில் உங்கள் நாட்டில் தொடர்ந்து நடக்கும் துப்பாக்கி சூட்டு பிரச்சினைக்கு ஒரு நிரந்தர முடிவு காண முயலுங்கள். அதில் அநேகம்பேர் இந்திய நாட்டவர்கள், அதிலும் மாணவர்கள். அவர்களின் உயிர் ஒருபொருட்டாக உங்களுக்கு தெரியவில்லையா? உங்களால் முடிந்தால் துப்பாக்கி சூடு நடத்துபவர்களை மிரட்டுங்கள்.


இறைவி
ஜன 31, 2025 12:23

அமெரிக்காவின் டிரம்ப்பின் இந்த ஆட்டம் வெத்து வேட்டு. காரணம், உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடும் செலவு செய்யும் அவர்களின் ஒவ்வொரு நாணயத்திற்கும் அமெரிக்கா கமிஷன் பெறுகிறது. மேலும் இன்னொரு உதாரணம். இன்று நாம் விசா, மாஸ்டர் கிரெடிட் கார்டை உபயோகப்படுத்தி செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் அமெரிக்கா கமிஷன் பெறுகிறது. அப்படி அமெரிக்கா நூறு சதம் வரி விதித்தால் நாம் நம்முடைய H1B விசா மக்களை திரும்பப் பெற அறிவிக்க வேண்டும். அமெரிக்கா தானாக அடிபணியும்.


தத்வமசி
ஜன 31, 2025 11:52

அடுத்து பொருளாதார யுத்தம் நடைபெறுமா? பையோ வார் எனப்படும் கொரோனா சண்டை நடந்து முடிந்தது போல தெரிகிறது. நாற்பது லட்சம் மக்களை இழந்து உலகம் பரிதவித்தது. மாதக்கணக்கில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப் பட்டார்கள். அடுத்து நான்காம் உலகப் போர். வணிகப் போரா ? எத்தனை கோடி மக்கள் தங்களின் சேமிப்பை, உழைப்பை இழக்கப் போகிறார்களோ ?


Kanns
ஜன 31, 2025 11:49

Practicality More Required than Ideology. America CANNOT Survive or Prospere Without Import of Cheap Foreign Materials& Services incl Labour/Talents. Why Should World Countries Require Highly Inflated USA Dollar or West EU ?? If World Coutries Ban it, USA Will Collapse


raja
ஜன 31, 2025 11:26

மாற்றம் ஒன்றே மாறாதது. அமெரிக்க டாலருக்கு நிகரான ஒரு கரன்சியை சிறிது காலம் தாழ்த்தினாலும் .... பிரிக்ஸ் நாடுகள் உருவாகியே தீரும் இது காலத்தின் கட்டாயம்.


Ganesh
ஜன 31, 2025 14:14

100 % உண்மை....


அப்பாவி
ஜன 31, 2025 11:01

அமெரிக்கா கிட்டே பில்லியன் டாலர் கணக்கில் உருவுவாங்க இந்தியாவும், சீனாவும். ஆனா டாகரை ஒழிச்சுக் கட்ட மீட்டிங் போடுவாங்களாம். அதான் இந்த டாரிஃப்.


புதிய வீடியோ