உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விசா ரத்து செய்யப்படும்: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

விசா ரத்து செய்யப்படும்: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பல்கலை வகுப்புக்கு செல்லாமல் இருந்தாலோ, பாதியில் படிப்பை நிறுத்தினாலோ விசா ரத்து செய்யப்படும் என்று இந்திய மாணவர்களை அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.அமெரிக்க கல்வி நிலையங்களில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர்.டிரம்ப் அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்றது முதல் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் அச்சத்திலேயே உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w82uwzf5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விசா தொடர்பான அவரது அறிவிப்புகளால் அமெரிக்காவில் தொடர்ந்து படிக்க முடியுமா என்ற சந்தேகம் இந்திய மாணவர்கள் மனதில் எழுந்திருக்கிறது. இந்நிலையில் டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்காக ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அந்நாட்டு தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அமெரிக்காவில் உள்ள மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டு இடைநிற்றல் அல்லது வகுப்புகளுக்கு ஒழுங்காகச் செல்லாமல் புறக்கணித்தல் அல்லது பள்ளி, கல்லூரி நிர்வாகத்துக்கு உரிய தகவல் தெரிவிக்காமல் தாங்கள் சேர்ந்துள்ள பட்டப்படிப்பிலிருந்து இடைநிற்றல் ஆகிய செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்களின் விசா திரும்பப் பெறப்படும்.மேலும், எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு செல்வதற்கான எந்தவொரு விசாக்களையும் பெற முடியாத, தகுதியிழக்கும் சூழலுக்கும் மேற்கண்ட மாணவர்கள் ஆளாவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Iniyan
மே 27, 2025 20:58

சரியான நடவடிக்கை


Ramesh Sargam
மே 27, 2025 20:01

அமெரிக்காவின் ஆட்டம் கொஞ்சம் ஒவராகத்தான் இருக்குது.


MUTHU
மே 27, 2025 19:42

அமெரிக்கா அதிகார வர்க்கம் நீண்ட காலமாய் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை டிரம்ப் மூலம் சரி செய்து கொள்கின்றார்கள்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
மே 27, 2025 19:31

JNU ல 10 வருஷம் ஊரான் காசுல ஒரே படிப்பு படிக்க அனுமதி அளிக்கும் மோடி மற்றும் காங்கிரஸ் அரசு மாதிரி அங்க இல்ல, நன்று


Sampath
மே 27, 2025 19:08

சரியான முடிவு . இந்திய பெற்றோர்களால் செய்ய முடியாததை அமெரிக்க அரசாங்கம் செய்கிறது. வாழ்த்துக்கள்


Sainathan Veeraraghavan
மே 27, 2025 18:50

ஏற்கனவே எப் 1 விசா இந்த மாதிரி நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் கொடுக்கப்படுகிறது. இது ஒன்றும் புதிய நிபந்தனைகள் அல்ல. ஒரு நாட்டில் படிக்க போகும்போதோ அல்லது வேலை செய்ய போகும்போதோ அந்த நட்டு சட்ட திட்டங்களுக்கு அடங்கி தான் நடக்க வேண்டும். படிக்க போனால் படிப்பை மற்றும் செய்ய வேண்டும். தேவை இல்லாமல் வேறு விஷயங்களில் தலையிட கூடாது


Sainathan Veeraraghavan
மே 27, 2025 18:44

VISA ISSUE BY A COUNTRY IS ITS OEN PREROGATIVE. THESE VISA RULES REGARDING F1 Student Visa visas are already in force. AMERICAN PRESIDENT WANTS TO PROTECT HIS COUNTRY AGAINST UNRULY PROTESTERS AND TERRORISTS. IN INDIA CONGRESS PARTY IS FULL OF MORONS AND DEUCHE BAGS. THEY WANT TO ENGAGE THEMSELVES IN USELESS ARGUMENTS AGAINST MODIJI GOVERNMENT. CONGRESS PARTY MUST BECOME DEFUNCT.


M S RAGHUNATHAN
மே 27, 2025 17:57

மிக சரியான முடிவு. படிக்கப் போனால் படிக்க வேண்டும். அங்கு போய் பாலஸ்தீனம் வாழ்க, இசுரேல் ஒழிக என்று ஹமாஸ் புராணம் பாடினால் இப்படித்தான் செய்ய வேண்டும். மேலும் அங்கு கல்லூரிகள் அனுமதி இல்லாமல் வேலை செய்வது தவறு. நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான கல்வி உதவித் தொகை கிடைக்கும். Scholarship. அது போல் படிப்பு முடிந்தவுடன் தாய் நாட்டிற்கு திரும்புவது தான் முறை. இங்கு வந்தபின் உரிய அனுமதி பெற்று, விசா வாங்கி எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்லட்டும்.


மீனவ நண்பன்
மே 27, 2025 20:13

அமெரிக்காவில் MS படிக்க போவதே இன்டர்ன்ஷிப் மற்றும் நல்ல நிறுவனங்களில் வேலை ...


lana
மே 27, 2025 17:25

சரியான நடவடிக்கை. படிக்க போன அந்த வேலையை பார்க்க வேண்டும். போராட்டம் நடத்த அந்த நாட்டு வரி செலவு செய்ய முடியாது. இங்கும் கல்லூரி பல்கலைக்கழகத்தில் குறிப்பாக JNU இது போல சட்டம் இயற்ற வேண்டும். மக்களின் வரிப்பணம் படிக்க மட்டுமே. நீ போராட்டம் செய்ய அடுத்தவன் ஏன் வரி கட்ட வேண்டும். அதே போல குறித்த காலத்தில் படித்து முடித்து வெளியே செல்ல வேண்டும். 40 வயது 50 வயது வரை வேலைக்கு செல்லாமல் ஆராய்ச்சி செய்கிறது எல்லாம் வெளியே துரத்த வேண்டும்.


Ganapathy
மே 27, 2025 17:15

மிகச்சிறந்தமுடிவு. பெற்றவர்களும் ஆசிரியர்களும் அடிப்படை பள்ளி கல்லூரி ஒழுக்கத்தை போதிக்க தவறியதால் இன்று அரசே தலையிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இத்துடன் கூட மாணவர் அணிகள் கட்சிகளில் தடை செய்யப்படவேண்டும். அரசியல்வாதிகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதும் அங்கு கூட்டங்கள் நடத்துவதும் தடை செய்யப்பட வேண்டும். எந்த கட்சியோ அல்லது அரசியல்வதியோ மாணவர்களை தூண்டிவிட்டால் அந்த கட்சி அல்லது அரசியல்வாதி பத்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அந்த கட்சியின் அங்கிகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அப்படிப்பட்ட அரசியல்வாதியின் எம்பி எம்எல்ஏ மந்திரி பதவிகள் பறிக்க படவேண்டும். பள்ளி கல்லூரிகளின் தேசிய பற்றை ஹிந்து ஸனாதன வரலாற்றை அனைத்து மாணவர்களும் கற்கும்படியாக முந்தைய குருகுலமுறையை அடிப்படையாக வைத்து பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மாணவர் புத்தியில் கடவுள் பக்தி வளர்க்கப் படவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை