உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  எங்களை சீண்டினால் சும்மா இருக்க மாட்டோம்: பாக்., முப்படை தளபதி அசிம் முனீர் காமெடி

 எங்களை சீண்டினால் சும்மா இருக்க மாட்டோம்: பாக்., முப்படை தளபதி அசிம் முனீர் காமெடி

இஸ்லாமாபாத்: ''இந்தியா எங்களை சீண்டினால் நாங்கள் முன்பு போல சும்மா இருக்க மாட்டோம்,'' என, பாகிஸ்தானின் முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்ற அசிம் முனீர் பேசி உள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருப்பவர் அசிம் முனீர். இவரை, பாக்., முப்படை தலைமை தளபதியாக அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.

பொய்

நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள இவர், அவ்வப்போது நம் நாட்டை மிரட்டும் வகையில், 'காமெடி' செய்து வருகிறார். தற்போது முப்படைகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு கிடைத்துள்ளதால், இன்னும் அதிகமாக உளறி வருகிறார். 'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரத்திலும் வாய்க்கு வந்தபடி கூச்சமே இல்லாமல் அசிம் முனீர் பொய் பேசினார். நம் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக மார் தட்டினார். கடைசியில் அவர் கூறியது அனைத்தும், பொய் என நிரூபிக்கப்பட்டது. அசிம் முனீரின் கதைகளை நம்பிய பாக்., அரசு, அவரை பெருமைப்படுத்தும் விதமாக, அரசியலமைப்பு சட்டத்தையே திருத்தி, முப்படை தலைமை தளபதி என்ற பொறுப்பை வழங்கியது. இதன் மூலம், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் அதிகாரத்துடன், அணு ஆயுத அமைப்புகளை கட்டுப்படுத்தும் அதிகாரமும் அவருக்கு கிடைத்துள்ளது.

அச்சுறுத்தல்

பாகிஸ்தானின் முப்படை தலைமை தளபதியாக பதவியேற்ற பின், அந்நாட்டு அதிகாரி களிடையே அசிம் முனீர் ஆற்றிய உரை: புதிதாக அமைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு படைகளின் தலைமையகம் வரலாற்று சிறப்புமிக்கது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதே இதன் முக்கிய நோக்கம். வளர்ந்து வரும் மற்றும் மாறி வரும் அச்சுறுத்தல்களை கருதி, முப்படைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது காலத்தின் தேவை . தற்போதைய போர்க்களம், நவீன போர்க்களமாக மாறியுள்ளது. எனவே, புதிய தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு படைகளும் மாற வேண்டியது அவசியம். எதிர் காலத்தில் இந்தியாவால் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடந்தாலும், அதற்கு பாக்., அளிக்கும் பதில் முன்பை விட மிகவும் வேகமாகவும், தீவிரமாகவும் இருக்கும். இந்தியா எந்தவொரு தவறான எண்ணத்திற்கோ அல்லது அனுமானத்திற்கோ பலியாகிவிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். இந்தியாவுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்ததுடன், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு, தடை செய்யப்பட்ட டி.டி.பி., எனப்படும், தெஹ்ரீக் - இ - தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத குழுவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Ramesh Sargam
டிச 10, 2025 21:05

வால் அறுந்த பல்லி மாதிரி துள்ளிக்கொண்டிருக்கிறது இந்த வேறு இடத்தில் அறுபட்ட பாக்கி பாகிஸ்தானி


ச.பாலசுப்பிரமணியன்
டிச 10, 2025 17:01

இந்தியா தாக்குதல் நடத்தினால் ஓடி ஒளிந்து கொள்ளும் மாவீரன் இந்த பெயில்டு மார்ஷல்.


கண்ணன்
டிச 10, 2025 12:29

எவ்வளவு வடிவேலுக்கள்! உலகம் தாங்காதையா! டுபாக்கூர்களெல்லாம் தளபதிகளாம்!


Harsha Vardhan
டிச 10, 2025 11:01

comedy piece semma joke


veeramani
டிச 10, 2025 09:39

ஏன்.. பாகிஸ்தானை நாங்க எப்ப மிரட்டினோம். உங்களின் ஐ எஸ் ஐ, தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் ட்ரைனிங் கொடுத்து எங்களது இந்திய திருநாட்டில் பல சில்லுண்டி வேலைகளை செய்துவருகிறது. இந்திய ராணுவம் பாகிஸ்தானாய் என்றுமே தாக்கவில்லை. ஆனால் தீவிரவாதிகளின் கூடாரத்தை மட்டும் தான் தகர்கிறோம். தேவைப்பட்டால் POK எங்களுக்கு கிடைத்துவிடின் பார்டரில் பென்சிங் போட்டுவிட்டு இந்தியர்கள் நிம்மதி எடுக்கிறோம்


Skywalker
டிச 10, 2025 09:31

For those who are saying not to mock pakistan, we will, as they show no mercy towards innocents for decades, it's a terrorist state functioning with extremist ideals, just how many mock israel and USA for its actions in Gaza we will mock pakistan, cry about it if you want


V RAMASWAMY
டிச 10, 2025 09:01

நீங்கள் பயங்கரவாதத்தினால் சீண்டினால் மட்டும் நாங்கள் சும்மா இருக்கவேண்டுமா கோழைகளே?


பேசும் தமிழன்
டிச 10, 2025 08:56

இந்தியா.. போன மாசம் தானே அடித்தோம்.. பாகிஸ்தான்.... அது போன மாசம்.... இது இந்த மாசம்.... வர வர பாகிஸ்தான் முனீர் நம்ம வடிவேலுக்கு கடும் போட்டியாக இருப்பார் போல ??


Tetra
டிச 10, 2025 08:34

ஏம்பா வைகைப்புயல் இவனுக்கு ஒரு டயலாக் சொல்லுப்பா


subramanian
டிச 10, 2025 08:14

அசிம் முனீரின் நாட்கள் அங்கு உள்ள தீவிரவாதிகளால் எண்ணப்படுகின்றன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை