உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Maha vishnu temple kumbabhishekam | puthurvayal | Nilgiris

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Maha vishnu temple kumbabhishekam | puthurvayal | Nilgiris

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் / Maha vishnu temple kumbabhishekam / puthurvayal / Nilgiris நீலகிரி மாவட்டம் கூடலூர் புத்தூர் வயல் அருகே உள்ள 600 ஆண்டு பழமையான மகாவிஷ்ணு கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்றது. தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி சிறப்பு பூஜைகள் மற்றும் உச்ச பூஜைகள் நடைபெற்றன. மாலை மஹா தீபாரதனை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. கடந்த 3ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன், கலச அபிஷேகம் நடைபெற்றது. நேற்று அதிகாலை 3:55 மணிக்கு கணபதி ஹோமம், சுப பிரிதிஷ்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் முடிந்து காலை 10:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அப்போது இரண்டு கருடன்கள் வானில் வட்டமிட்டதை பார்த்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 11:30 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியும், மாலை மஹா தீபாராதனை மற்றுமு் திருவிளக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வரும் 12ம் தேதி வரை தினமும் அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.

ஏப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை