உள்ளூர் செய்திகள்

வரலாற்றில் சாதனை

வரலாற்றில் முதல் முறையாக இந்திய ராணுவ விமானப் படையில் மூன்று பெண்கள் போர் விமானிகளாக இணைந்திருக்கிறார்கள். பாவனா காந்த், அவானி சதுர்வேதி, மோகனா சிங் ஆகிய மூவரும், பல்வேறு கடினமான பயிற்சிகளை எடுத்துக்கொண்டவர்கள். முதல் கட்டத்தில் 150 மணி நேரம் விமானங்களை இயக்கிச் சாதனை படைத்தார்கள். இரண்டாவது கட்டமாக இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஹாக் போர் விமானங்களை 6 மாதங்கள் இயக்கிப் பயிற்சி பெற்றார்கள். விபத்துகளைச் சமாளிப்பது, இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குவது போன்ற அனைத்துப் பயிற்சிகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !