ஒரே பாடநூல்!
நடப்பு ஆண்டிலேயே 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதற்காக, எட்டாம் வகுப்புக்கு, முப்பருவ முறை இல்லாத, ஒரே பாடப் புத்தகத்தை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசின் திருத்தப்படி, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும்படி அறிவுறுத்தியது. இந்த உத்தரவை, நாட்டிலேயே முதல் மாநிலமாக, தமிழ்நாடு அமல்படுத்தியுள்ளது.