இங்கிலாந்து 444
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது போட்டி நாட்டிங்காமில் நடந்தது. முதலில் 'பேட்டிங்' செய்த இங்கிலாந்து அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் அதிரடி காட்ட, 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 444 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து உலக சாதனை படைத்து, தொடரையும் கைப்பற்றியது. கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 42.4 ஓவரில் 275 ரன்கள் மட்டும் எடுத்து 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.