காற்று மாசைக் கட்டுப்படுத்துவோம்!
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்காக, சோதனை முறையில், ஒற்றை, இரட்டை இலக்க எண்கள் அடிப்படையில் வாகனப் போக்குவரத்து முறையை டில்லி அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த ஜனவரி 1 முதல் 15 நாட்களுக்கு இந்தத் திட்டம் பயன்பாட்டில் இருந்தது. இப்போது மீண்டும், ஏப்ரல் 15 முதல் 30 வரை அதே முறையைக் கடைப்பிடிக்க டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.