நான்கில் ஒன்று சொல்!
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.1. தெலங்கானாவில் சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், எந்தத் தேசிய கட்சி அதிக இடங்களைக் (4 மாநகராட்சி; 67 நகராட்சி) கைப்பற்றியது?அ. காங்கிரஸ் ஆ. பாரதிய ஜனதாஇ. பாரத் ராஷ்டிர சமிதிஈ. தெலுங்கு தேசம் கட்சி2. புதுடில்லியில் புதிதாகத் திறக்கப்பட்டு உள்ள பிரதமர் அலுவலகக் கட்டடத்தின் பெயர் என்ன?அ. ஆயுஷ்மான்ஆ. ஸ்வச் பாரத்இ. சேவா தீர்த் ஈ. முத்ரா3. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள நாட்டின் முன்னணி துறைமுகமான பாரதீப், ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, பசுமை ஹைட்ரஜன் மையமாக மாற்றப்படுகிறது?அ. குஜராத்ஆ. பீகார்இ. தமிழகம்ஈ. ஒடிஷா 4. சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு உள்ள, தஞ்சாவூர் தமிழ் பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட உள்ள சோழர் அருங்காட்சியகம், எவ்வளவு கோடி மதிப்பில் உருவாகிறது?அ. ரூ.60.75 கோடிஆ. ரூ. 56.41 கோடி இ. ரூ.47.56 கோடிஈ. ரூ. 55.45 கோடி5. வங்கதேசத்தில் நடந்த பொதுத்தேர்தலில், 20 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள வங்கதேச தேசியவாத கட்சியைச் சேர்ந்த யார் பிரதமராகி உள்ளார்?அ. முஹம்மது யூனுஸ்ஆ. கலீதா ஜியாஇ. தாரிக் ரஹ்மான் ஈ. ஹுசைன் முகமது 6. பஹ்ரைனில் நடந்த பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில், ஆண்கள் ஒற்றையர், இரண்டையர் பிரிவில் தங்கம் வென்று, ஒற்றையர் பிரிவில் அதிகமுறை சாம்பியன் ஆன வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்திய வீரர்?அ. பிரமோத் பகத் ஆ. அருண்குமார்இ. திவ்ய பிரகாஷ்ஈ. சஞ்சய்குமார்விடைகள்: 1. அ 2. இ 3. ஈ 4. ஆ 5. இ 6. அ