உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / பெண்மையை போற்றும் ஓவியங்கள்

பெண்மையை போற்றும் ஓவியங்கள்

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, 70க்கும் மேற்பட்ட பெண் ஓவியர்கள் பங்கேற்றுள்ள இரண்டு நாள் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை, எழும்பூரில் அருங்காட்சியகத்தில் நேற்று துவங்கியது.இதில், பெண்களை மையப்படுத்தி பல்வேறு கருப்பொருளில், நம் கண்முன்னே ஓவியங்கள் வரைகின்றனர்.பெண் ஓவியர்களுக்கான நேரடி ஓவியம் வரைதல் நிகழ்ச்சிகள், பெங்களூரு, டில்லி உள்ளிட்ட இடங்களில் மட்டுமே நடக்கின்றன; சென்னையில் அரிது. பெண்கள் ஒன்று கூடி, ஓவிய கலை வாயிலாக, அவர்களின் தனித்திறமைகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பெண் ஓவிய கலைஞர்களான இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்., எழும்பூர் அருங்காட்சியக நிர்வாகம் ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்த கண்காட்சியில் மதுரை, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர், இதில் மருத்துவர், இன்ஜினியர் உட்பட பெண்கள் பங்கேற்று, 'அக்ரிலிக், சார்கோல், எண்ணெய் ஓவியம்' உட்பட பல வகை ஓவியங்களை வரைந்துள்ளனர்.இந்த ஓவிய கண்காட்சியை, இன்று மாலை 6:00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்; அனுமதி இலவசம்.படங்கள்:சுரேஷ் கண்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ