உள்ளூர் செய்திகள்

லெபனானில் பள்ளிக்கூட மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி

பெய்ரூட் : லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் 75வது ஹிந்தி திவாஸ் தினத்தையொட்டி ஹிந்தி மொழியில் பேச்சு, கவிதை மற்றும் பாடல் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை இந்திய தூதர் நூர் ரஹ்மான் பரிசாக வழங்கி கௌரவித்தார். அப்போது பேசிய தூதர், ஹிந்தி மொழியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட இந்திய சமூகத்தினர் பலர் கலந்து கொண்டனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !