தனுஷ் பாசத்தில் யாத்ரா தனுஷ் : வைரலாகும் புகைப்படம்
ADDED : 1440 days ago
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிந்ததாக ஜனவரி மாதம் அறிவித்தனர். தற்போது இருவரும் அவரது பணிகளில் பிஸியாக உள்ளனர். தனுஷ், நானே வருவேன், வாத்தி படங்களில் நடிக்கிறார். ஐஸ்வர்யா தனது ஆல்பம் பணிகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் ஒரு மாதம் கழித்து தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது இப்போது, இதை நான் இதற்கு முன்பு எங்கே பார்த்தேன்? #யாத்ராதனுஷ். #நானேவருவேன் என பதிவில் எழுதியுள்ளார் தனுஷ்.
இணையதளத்தில் வைரலாகும் இந்த புகைப்படம் ஊட்டியில் நடைபெற்ற நானே வருவேன் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது.