உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர்

'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர்

ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி 1, 2' படங்கள் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள். 'பாகுபலி 2' படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது.

அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த 'ராஜமாதா' கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்க வேண்டியது. அவரிடம் கதை சொன்ன பிறகு சில பல காரணங்களால் அவரை நடிக்க வைக்கவில்லை. அதன்பின் அது குறித்து சில சர்ச்சைகள் வெளிவந்தன. ஸ்ரீதேவி அவரகு குழுவினருக்காக ஒரு ஹோட்டலின் தளத்தையே கேட்டார் என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆனால், ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். “பாகுபலி' படத் தயாரிப்பாளர்கள் தான் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள். அதை அவர்களின் முகத்திற்கு நேராகவே சொல்லுவேன். ஸ்ரீதேவிக்கு 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தின் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தைக் கொடுப்பதாகத் தயாரிப்பாளர்கள் சொன்னார்கள். அவர் வாய்ப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நடிகை அல்ல. அவருக்குரிய மரியாதையைக் கொடுக்கவில்லை என்றால் அவர் ஏன் அதில் நடிக்க வேண்டும். அதற்கு நான் சாட்சி.

படத்திற்காக நீண்ட நாட்கள் நடிக்க வேண்டி இருந்தது. அப்போது குழந்தைகளுக்கும் விடுமுறை நாட்கள். நான் அவர்களுக்கான ரூம் செலவுகளை கொடுக்கப் போகிறேன். ஆனால், ராஜமவுலியிடம் தயாரிப்பாளர்கள் தவறான தகவலைத் தந்துள்ளார்கள்,” என்று கடுமையாகப் பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !