உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : பாராட்டுகளை குவித்தும் வெளிவராத படம்

பிளாஷ்பேக் : பாராட்டுகளை குவித்தும் வெளிவராத படம்

தமிழ் சினிமாவின் முக்கியமான எடிட்டராக கருதப்படுகிறவர் பி.லெனின். நதியை தேடி வந்த கடல், பண்ணையபுரத்து பாண்டவர்கள், சொல்ல துடிக்குது மனசு, ஊருக்கு 100 பேர், உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். எந்த படமும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.

அவர் இயக்கிய முக்கியமான படம் 'எத்தனை கோணம் எத்தனை பார்வை', ஜெயகாந்தன் எழுதிய நாவலை அதே பெயரில் படமாக இயக்கினார். இதில் தியாகராஜன், ஸ்ரீப்ரியா, சுரேஷ், நளினி நடித்தார்கள். இளையராஜா இசை அமைத்தார். பி.கண்ணன் ஒளிப்பதிவு செய்தார். இரண்டு முரண்பட்ட காதல்களை சொன்ன படம்.

படத்தின் பிரிவியூ காட்சி பார்த்த திரையுலக பிரமுகர்கள் படத்தை பாராட்டி தள்ளினார்கள். ஆனால் படம் கடைசி வரை வெளிவரவில்லை. இந்த படத்தை தயாரித்த வி.எம்.மூவீஸ் என்ற நிறுவனம் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானதால் படம் வெளிவரவில்லை என்றார்கள். பி.லெனினின் முந்தைய படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்ததால் நிதி உதவி செய்து யாரும் படத்தை வெளியிடவும் முன்வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !