அருளொளி விநாயகர் கோயிலில் கூட்டு பிரார்த்தனை
ADDED :1982 days ago
ராமநாதபுரம்: வழுதுார் அருளொளி விநாயகர் கோயிலில் ஆக.12ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. பத்து நாட்களாக பல்வேறு அபிேஷகம், ஆராதனை நடந்தது.சதுர்த்தியை முன்னிட்டு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 13 வகை அபிேஷகம் நடந்தது. உலக நன்மை வேண்டியும், கொரோனா தொற்றிலிருந்து மக்கள்விடுபட வேண்டியும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.