வாய்ப்பை பயன்படுத்து
சொல்கிறார் ஆதிசங்கரர்
* வாய்ப்பு கிடைத்தும் நல்லதைப் பேசாதவன் பயனற்றவன்.
* உயிருள்ள வரை நினைக்க வேண்டும் என்பதே கடவுளிடம் கேட்க வேண்டிய வரம்.
* ஐம்புலன்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே மனம் கட்டுப்படும்.
* நெருப்பு இல்லாமல் சமைக்க முடியாது. ஞானம் இல்லாமல் மோட்சம் கிடையாது.
* தர்ம வழியில் வாழ்வு நடத்தினால் மனம் துாய்மை பெறும்.
* கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் வாழுங்கள்.
* தனிமையில் இனிமை இருக்கிறது. அதை அனுபவியுங்கள்.
* பிறர் போற்றுதல், துாற்றுதலை பொருட்படுத்த வேண்டாம்.
* உதட்டின் சிரிப்பை விட உள்ளத்தின் சிரிப்பே அழகானது.
* பயனில்லாத ஒரு வார்த்தையைக் கூட பேசாதீர்கள்.
* கடவுளிடம் மனதை முழுமையாக ஒப்படையுங்கள்.
* சுயநலத்தை கைவிட்டால் கடவுளை அடைய முடியும்.
* கடவுளின் திருவடியை சிந்திப்பதே மேலான இன்பம்.
* மற்றவரை திருத்தும் விதத்தில் உங்களை தகுதிப்படுத்துங்கள்.
* தியானத்திற்கு நேரமோ, இடமோ தடையல்ல.
* ஒளி இல்லாமல் காட்சி தெரியாது. ஆராய்ச்சி இல்லாமல் ஞானம் தோன்றாது.
* நான், எனது என்னும் இரண்டும் துன்பத்திற்கு ஆளாக்கும்.