உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி ஸ்வாமிகளுக்கு உற்சாக வரவேற்பு!

சிருங்கேரி ஸ்வாமிகளுக்கு உற்சாக வரவேற்பு!

கரூர்: கரூருக்கு வந்த சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகளுக்கு நேற்று மாலை பக்தர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிருங்கோரி ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகள் கரூரில் வரும் 8 ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதற்கான நேற்று மாலை 6.30 மணிக்கு திண்டுக்கல்லில் இரு ந்து கார் மூலம் கரூர் பசுபதீஸ்வரா கோவிலுக்கு வந்தார். அவருக்கு கரூர் சாரதா பீடம் மற்றும் பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அலங்கரிப்பட்ட வாகனத்தில் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகள் ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக கரூர் அரவிந்த் டிரேடர் வணிக வளாகத்தை சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று (7ம் தேதி) காலை 9 மணிக்கு சிருங்கேரி ஸ்வாமிகள் நெரூர் ஸ்ரீ பிரமேந்திராள் அதிஷ்டானம் செல்கிறார். மாலை 5 மணிக்கு பக்த மஹா ஜனங்களுக்கு தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (8 ம் தேதி) காலை சிறப்பு பூஜை, மதியம் 12.30 மணிக்கு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம், ஸ்ரீ ராஜ ராஜஸ்வரி ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !