உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

பழநி: பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.

பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா (நவ.13) காப்பு கட்டுதல் உடன் துவங்கியது. தினமும் சண்முகருக்கு அர்ச்சனை, தங்க சப்பரத்தில் சின்ன குமார சுவாமி புறப்பாடு, தங்கரத புறப்பாடு நடைபெற்றது.

திருக்கார்த்திகை தீபம்: (நவ. 18) நேற்று சாயரட்சை பூஜையில் சன்னதியில் பரணி தீபம் ஏற்றுதலும். திருக்கார்த்திகை தினமான இன்று (நவ.,19) பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற்றது. மாலை 4:45 மணிக்கு சின்ன குமாரசாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி யாகசாலை, பிரகாரம் வலம் வந்தார். அதன்பின் தீபமேற்றும் மண்டபத்திற்கு எழுந்தருளி மாலை 5:30 மணிக்கு பிரகாரங்களில் தீபம் வைத்தல் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வும், அக்னி லிங்க தரிசனமும், சொக்கப்பனையும் ஏற்றுதலும் நடந்தது. மலைக்கோயிலை தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில்களில் மகா தீபம் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது.

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருக்கார்த்திகை திருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்கள் அனுமதி இல்லை. பகல் 2:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்படுவர். அதன்பின் மாலை 6:00 மணிக்கு வின்ச், ரோப் கார், படிப்பாதை வழியாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வுகள் அனைத்தும் சமூக வலைதளம், கோயில் நிர்வாகத்தால் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !