உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாசமுள்ள பார்வையிலேயே கடவுள் வாழ்கிறார்

பாசமுள்ள பார்வையிலேயே கடவுள் வாழ்கிறார்


என சொல்கிறார் காஞ்சி மஹாபெரியவர்

* குடும்பத்தினரிடம் பாசமாக இருக்கிறாயா... உனது வீட்டில் கடவுள் வாழ்கிறார்.   
* உன் குறையை கடவுளிடம் கூறுவது போல் நிறைகளையும் சொல்லு.
* கடவுள் இசை வடிவானவர். அவரது அருளை இசையால்கூட பெறமுடியும்.
* உன்னிடம் என்ன உள்ளதோ அதை வைத்து பிறருக்கு உதவி செய்.
* உண்மை பாதையில் சென்றால் கடவுளை காணலாம்.
* மனதை அலைபாய விடாதே. அதை ஒரு இடத்தில் நிறுத்து.
* நல்லதை செய்ய தயங்காதே. தைரியமாக அதில் ஈடுபடு.
* வருமானத்திற்குள் குடும்பம் நடத்த வாழ்க்கைத்துணைக்கு சொல்லிக்கொடு.
* அமைதியான மனம் இருந்தால்தான் சேவையில் ஈடுபட முடியும்.  
* ஒருவருக்கு எவ்வளவுதான் கொடுத்தாலும் மனம் திருப்தி அடையாது.
* உன் வீட்டை முதலில் கவனி. பிறகு நீ சமூகத்திற்கு தொண்டாற்றலாம்.
* நல்ல எண்ணத்துடன் செய்யும் செயலுக்கு போட்டி, பொறாமை இருக்காது.
* தினந்தோறும் ஒரு செயலில் தொடர்ந்து ஈடுபடு. உன் மனம் சுத்தமாகும்.
* எதற்கும் பதட்டப்படாதே. நடப்பது நடந்தே தீரும்.
* முன்னோர்கள் நடந்த பாதையில் நடந்து செல்.  
* சர்க்கரையை வைத்து பல பண்டங்களை செய்யலாம். அதுபோல் கடவுளும் பல வடிவில் இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !