சிவனுக்கு பிடித்த ‘8’
ADDED :1209 days ago
கீழ்கண்ட எட்டு பண்புகளே சிவபெருமானுக்கு பிடித்த மலர்களாகும்.
என பட்டியல் இடுகிறார் திருநாவுக்கரசர்.
*. அகிம்சை – மனம், மொழி, மெய்களால் தீங்கு செய்யாதிருத்தல்.
*. இந்திர ஜபம் – ஐம்புலன்களை (மெய்,வாய் கண், காது, மூக்கு) அடக்குதல்
*. தைரியம் – துன்பத்தைக் கண்டு கலங்காதிருத்தல்.
* பொறுமை – பிறர் செய்யும் தீமையை பொறுத்துக் கொள்ளுதல்
*. சவுசம் – மனம், உடலை துாய்மையாக வைத்தல்
*. அத்ரோகம் – கோபத்தை யார் துாண்டினாலும் அதற்கு இடம் கொடுக்காதிருத்தல்
* நாணம் – தீய செயல்களை செய்ய வெட்கப்படுதல்
*. சத்தியம் – எண்ணம், பேச்சால் உண்மையை பின்பற்றுதல்