சத்தியமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1247 days ago
செஞ்சி: சத்தியமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
செஞ்சி தாலுகா சத்தியமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி விழா நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்தனர். காலை 10 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மாலை 4 மணிக்கு பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இரவு 7 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதில் முத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.