உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுார் அங்காளம்மனுக்கு 2 லட்சம் வளையல்களால் அலங்காரம்

மேல்மலையனுார் அங்காளம்மனுக்கு 2 லட்சம் வளையல்களால் அலங்காரம்

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு 2 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு அங்காளம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து 2 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !