திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகான்யாச ருத்ர யாகம்
ADDED :1330 days ago
திருவண்ணாமலை : உலக நன்மைக்காக நேபாளம் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி சன்னதி முன் மகான்யாச ருத்ர யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். கொட்டும் மழையும் பொறுப்பெடுத்தாமல் நனைந்தபடி பிரகாரத்தை சுற்றி வந்து, கோவிலில் பக்தரகள் சுவாமி தரிசனம் செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திகை தீபத் திருவிழாவில் ஏழாம் நாள் நடைபெறும் தேரோட்டத்திற்கான, பக்தர்கள் இழுக்கும் தேர் சங்கிலிகளை சீரமைக்கும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.