திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் ராமர் பட்டாபிஷேகம்
ADDED :932 days ago
கடலுார்-கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு ராமர் பட்டாபிஷேகம் நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம் கடந்த 30ம் தேதி துவங்கியது. தினமும் காலை திருமஞ்சனம், இரவு சுவாமி புறப்பாடு நடந்தது.5ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. 11ம் நாள் உற்சவமான நேற்று காலை திருமஞ்சனம் நடந்தது. இரவு சீதா, லட்சுமண, ஆஞ்நேயர் சமேத கோதண்டராமர் சுவாமிக்கு பட்டாபிஷேக அலங்காரம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (10ம் தேதி) மாலை 6:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.