பரனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :838 days ago
திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அடுத்த பரனூர் கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அரகண்டநல்லூர் அடுத்த பரனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சக்தி விநாயகர், பால விநாயகர், பாலமுருகன், புத்து மாரியம்மன், கோபாலகிருஷ்ணர் மற்றும் பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. முன்னதாக கடந்த 27ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. விழாவின் முக்கிய தினமான இன்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால பூஜை, நாடி சந்தானம், தத்துவர்ச்சனை, மூல மந்திர ஜப ஹோமம், மஹாபூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி, சுவாமிகளின் மூல கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.