உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் புஷ்பயாகம்; ஆடிப்பூர உற்ஸவம் நிறைவு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் புஷ்பயாகம்; ஆடிப்பூர உற்ஸவம் நிறைவு

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் புஷ்ப யாகத்துடன் நிறைவு பெற்றது.

ஜூலை 14 அன்று கொடியேற்றத்துடன் துவங்கிய இத்திருவிழாவில் ஜூலை 22 அன்று தேரோட்டம் நடந்தது. ஆடிப்பூர விழா நிறைவு நாளான நேற்று மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்கிழமைகுறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருளினர். அங்கு பல்வேறு வகை மலர்களால் பூக்கோலம் இடப்பட்டு, புஷ்ப யாக பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், கோயில் பட்டர்கள், கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !