ஏகாதசி விரதம்; பெருமாளை வழிபட பாவம் தீரும்.. நிம்மதி கிடைக்கும்
ADDED :1025 days ago
விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ஆடி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு சயனி என்று பெயர். அரங்கனை நினைத்து விஷ்ணு புராணம், பாகவதம், ராமாயணம் படிப்பது சிறப்பு. ஏகாதசி என்று சொன்னாலே பாவம் தீரும் என்றால், பெருமாளை வழிபட எவ்வளவு புண்ணியம் சேரும்..! சனிக்கிழமை, ஏகாதசியான இன்று பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல் சிறப்பு.