உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி செவ்வாய்; ஜெய மாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆவணி செவ்வாய்; ஜெய மாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; சுந்தராபுரம், காமராஜ் நகரில் உள்ள ஜெய மாரியம்மன் கோவிலில் ஆவணி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சந்தன காப்பு அலங்காரத்தில் மூலவர் ஜெயமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !