சிந்தாமணிநல்லூரில் கும்பாபிஷேக விழா
ADDED :4756 days ago
விக்கிரவாண்டி: சிந்தாமணி நல்லூரில் ஐந்து கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணிநல்லூரிலுள்ள சித்திவினாயகர், திரவுபதியம்மன், கன்னியம்மன், நாகாத்தம்மன், செல்வவினாயகர் கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி கடந்த 26ம் தேதி கணபதி ஹோமமும், நேற்று காலை மூன்றாம் கால யாகபூஜையும் நடந்தது. காலை 9.20 மணிக்கு கடம் புறப்பாடாகி, கோபாலகிருஷ்ண சுவாமி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.விழாவில் மாவட்ட சேர்மன் அலமேலு வேலு, அ,தி..க., ஒன்றிய செயலாளர் சிந்தாமணி வேலு, கன்யாலால் ரமேஷ் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள் வேணுகோபால், ரங்கநாதன், தங்கராசு, கலியமூர்த்தி மற்றும் பலர் செய்திருந்தனர்.