தீவனுார் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :386 days ago
திண்டிவனம்; திண்டிவனம் அருகே உள்ள தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. தீவனுாரிலுள்ள சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில், ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலை வேள்வியும், பூஜிக்கப்பட்ட கலசங்கள் உட்பிரகாரம் வலம் வந்து, 108 சங்காபிேஷகம், கலச நீரால்ம மூலவருக்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோவில் உட்பிரகாரம் வலம் வந்தது. தொடர்ந்து ஊஞ்சல் உற்வசம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.