ஷீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு ஆரத்தி பூஜை
ADDED :496 days ago
திண்டுக்கல்; வேடசந்தூர் வட்டம், எரியோடு ஷீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை ஆரத்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கணபதி ஹோமம், சாய் அஷ்டோத்திர ஹோமம், சாவடி ஊர்வலம், ஷீரடி சாய்பாபாவிற்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பாபாவை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.