உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

பெரம்பலூர்; பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கார்த்திகை மாதத்தில் வரும் அமாவாசையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. 


ஸ்ரீ முத்துமாரியம்மனை வண்ண மலர்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் செய்து பெண்கள், மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர். கார்த்திகை அமாவாசையையொட்டி அன்னதானம் நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து, தன தானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர்.19 வார்டு அன்னதான குழுவினர் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு அபிஷேக பொருட்கள், மற்றும் அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தனர் . மாதம் தோறும் வரும் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !