உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா: 1008 சங்காபிஷேகம்

நத்தம் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா: 1008 சங்காபிஷேகம்

நத்தம்: நத்தம் செட்டியார்குளத்தெரு-வெட்டுக்காரத் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அழகர்கோவில் சென்று பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருதலும், 1008 சங்காபிஷேகமும் நடந்தது. இரவு செட்டியார்குளம் விநாயகர் கோவிலில் இருந்து கரகம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், அரண்மணை பொங்கல் வைத்தல், குத்துவிளக்கு பூஜை, போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.அன்னதானம் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !