பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :44 minutes ago
கோவை; ஆடி மாதம் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் வெள்ளி காப்பு கவசத்துடன் பச்சை வண்ண பட்டு உடுத்தி ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.