தண்டலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED :22 hours ago
கள்ளக்குறிச்சி: தண்டலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் 19ம் ஆண்டு ஆடிமாத பால்குடம் ஊர்வலம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையிலிருந்து நேற்று காலை 9:00 மணியளவில் கச்சேரி சாலை, தியாகதுருகம் சாலை வழியாக சக்தி அழைத்தல், பூங்கரம், பால்குடம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.