உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுர்த்தி விழா; சிம்ம வாகனத்தில் உப்பூர் விநாயகர் வீதி உலா வந்து அருள்பாலிப்பு

சதுர்த்தி விழா; சிம்ம வாகனத்தில் உப்பூர் விநாயகர் வீதி உலா வந்து அருள்பாலிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்:  உப்பூர் வெயிலுகந்த விநாயகர் மூன்றாம் நாள் ஊர்வலமாக சிம்ம வாகனத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா செப்.5 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் வெள்ளி மூஷிக வாகனம், கேடக வாகனம் என விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிலையில், மூன்றாம் நாள் ஊர்வலமாக சிம்ம வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஊர்வலமாகச் சென்ற விநாயகருக்கு தெருக்களில் பெண்கள் மாக்கோலம் இட்டு வரவேற்றுடன், அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !